வாழ்த்து கூறிய கமலுக்கு நன்றி கூறிய பாக்யராஜ்

  • IndiaGlitz, [Sunday,January 08 2017]

இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதை ஆசிரியர், இயக்குனரான கே.பாக்யாரஜ், நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய நிலையில் அவருக்கு கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கே.பாக்யராஜ் அவர்களுக்கு சமூக வலைத்தளத்தில் கணக்கு எதுவும் இல்லை. எனினும் அவருடைய மகன் சாந்தனு, கமலின் டுவீட் குறித்து தந்தையிடம் கூறியுள்ளார். கமலின் வாழ்த்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்த பாக்யராஜ், மகனின் சமூக வலைத்தளம் கமலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி கமல் சார். உங்களுடன் இணைந்து உதவி இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் பணிபுரிந்தது மறக்க முடியாது இனிமையான நினைவுகள் மட்டுமின்றி நிறைய அனுபவங்களையும் கற்று கொண்டேன்.

உங்களுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் எனக்கு ஒரு மைல்கல்லாக இருந்தது. இந்திய திரையுலகின் ஜாம்பவான்களாக எம்.ஜி.ஆர், சிவாஜி, அமிதாப், ரஜினி ஆகியோர்களுடன் பணிபுரிந்தது போன்ற உணர்வு எனக்கு உங்களுடன் பணிபுரிந்தபோது இருந்தது.

தங்களுடைய அன்பான வாழ்த்துக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று கே.பாக்யராஜ் கூறியுள்ளார்.