'பாக்கியலட்சுமி' ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறதா? விரைவில் திருமண அறிவிப்பு?

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆகி உள்ளனர் என்ற நிலையில் தற்போது ’பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிக்கும் ரீல் ஜோடியும் விரைவில் ரியல் ஜோடி ஆக இருப்பதாக கூறப்படுவதை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் செழியன் என்ற கேரக்டரில் நடித்து வந்த ஆரியன் சமீபத்தில் வெளியேறிய நிலையில் அந்த கேரக்டரில் விகாஸ் சம்பத் என்பவர் தற்போது நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக ஜெனி என்ற கேரக்டரில் திவ்யா என்பவர் நடித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திவ்யா ஏற்கனவே ஒரு பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்ய இருந்த நிலையில் அதன் பின்னர் அந்த திருமணம் நின்று போனது. இந்த நிலையில் சமீப காலமாக அவர் திருமணம் குறித்து எதுவும் பேசாமல் இருந்தார். தற்போது அவர் விகாஸ் சம்பத்தை திருமணம் செய்ய இருப்பதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

என்னை சேவ் பண்ணுங்க.. கையெடுத்து கும்பிட்ட பெண் போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்த ஒரு டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றதை அடுத்து பெண்கள் அணியில் நாமினேஷனில் உள்ளவர்களில் ஒருவரை காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

நாமினேட் ஆன நபரை காப்பாற்றும் டாஸ்க்.. இதிலும் கோட்டை விட்ட ஆண்கள் அணி..!

டாஸ்க்கில் வெற்றி பெற்றால் நாமினேட் ஆன நபரை காப்பாற்ற முடியும் என்ற நிலையில், இந்த டாஸ்க்கிலும் ஆண்கள் அணி தோல்வி அடைந்த நிலையில், பெண்கள் அணியினர் வெற்றியின் உற்சாகத்தில்

சூர்யா- ஆர்ஜே பாலாஜி படத்தின் நாயகி இவரா? என்ன டைட்டில் தெரியுமா?

சூர்யா நடிப்பில் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், இந்த படத்தின் நாயகி மற்றும் டைட்டில் குறித்த தகவல் கசிந்துள்ளது.

பின்னுக்கு தள்ளப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்.. என்ட்ரி ஆன ஜீடிவி சீரியல்... இந்த வார டிஆர்பி ரேட்டிங்..!

தமிழ் சீரியல்களை பொருத்தவரை, சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு மட்டுமே போட்டியாக இருந்த நிலையில், தற்போது டாப் 10 இடத்தில் ஜீ டிவி சீரியலும் இணைந்துள்ளது. இதனால் போட்டி அதிகமாகி உள்ளது.

நடிகை தமன்னாவிடம் 5 மணி நேரம் விசாரணை செய்த அமலாக்கத்துறை.. என்ன காரணம்?

நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை செய்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.