விமர்சனங்களை தாண்டி, 20 வயதில் சாதிக்கும் சீரியல் நடிகை....!

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் காற்றுக்கென்ன வேலி சீரியலின் நாயகிதான் நடிகர் பிரியங்கா குமார். சீரியலில் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருக்கு, சமூகவலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

பிரியங்கா சின்னத்திரைக்கு வந்தது எப்படி...?

தன்னுடைய சிறிய வயதில் இருந்தே சினிமா மீது பிரியங்காவிற்கு ஆர்வமாம். இதனால் பள்ளியில் படிக்கும் போதே, அதாவது தன் 15-ஆம் வயதில் மாடலிங் செய்ய துவங்கியுள்ளார். இதன் மூலம் ஏராளமான ஷூட்களிலும், விளம்பரங்களிலும் நடித்து வந்துள்ளார். 'மேக்ஸ் எலைட் மாடல் லுக் இந்தியா’ என்ற போட்டியில் சென்ற 2016-இல் கலந்து கொண்டதன் மூலம், பிரியங்காவிற்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிபிஏ பட்ட படிப்பை மைசூரில் நிறைவு செய்த பிரியங்கா, இதையடுத்து முழுமையாக நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார். முதன் முதலாக கன்னட சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, அதை லாவகமாக பயன்படுத்திக் கொண்ட இவருக்கு மேலும் சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன்பின் சன் டிவியில் வெளியான சாக்லேட் என்ற சீரியலில் டஸ்கி நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்க, அந்த கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி சீரியலில், துறுதுறுவென வெண்ணிலா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் பிரியங்காவிற்கு, எதிர்மறையான விமர்சனங்களும் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கெல்லாம் பதிலளிக்காமல் பேட்டிகள் மூலம், தன்னுடைய தைரியமான கருத்துக்களை முன்னெடுத்து வைக்கிறார் பிரியங்கா.

More News

பாடபுத்தகங்களில்  தமிழர்கள் வரலாற்றை அவதூறாக காண்பிக்கிறார்கள்....!சீமான் காட்டம்....!

பாடபுத்தகங்களில்  இடம்பெற்றுள்ள தமிழர்கள் வரலாறு அவதூறாக உள்ளது. இது தமிழர்களுக்கு எதிராகவே திட்டமிட்டு

போதைப்பொருள் விவகாரம்… நடிகை சஞ்சனா கல்ராணி சிறைக்கு செல்கிறாரா?

பாலிவுட் சினிமா உலகில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னரே போதைப்பொருள் விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியது

வெளிப்படுத்தாத ஒரு மன உளைச்சல்: பணமோசடி விவகாரம் குறித்து ஆர்யா

பிரபல நடிகர் ஆர்யா மீது ஜெர்மன் வாழ் இலங்கை தமிழ் பெண் ஒருவர் பணமோசடி புகார் அளித்திருந்த நிலையில் இந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: புரமோ படப்பிடிப்பின் அட்டகாசமான புகைப்படங்கள்!

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பானது என்பதும் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

நடிகர் ஆர்யா மோசடி வழக்கில் திடீர் திருப்பம்: போலீசாரின் கைது நடவடிக்கையால் பரபரப்பு

நடிகை ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி  ரூ.71 லட்சம் பணம் வாங்கிக் கொண்டதாகவும் தற்போது அவர் திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண்