ரேஷன் கார்டை பயன்படுத்தாமல் விட்டால் ரத்து செய்யப்படுமா??? எச்சரிக்கை அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Monday,December 14 2020]

 

கொரோனாவுக்கு இடையில் மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் இந்தியாவிற்குள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு பற்றிய எச்சரிக்கை அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு அதாவது ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி தற்போது ஒரு நபர் 3 மாதங்கள் வரை ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் அவர்கள் அரசாங்க உதவியின்றி தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்று கருதப்படுவார்கள் எனக் கூறப்பட்டு உள்ளது.

இதன் பொருள் என்னவென்றால் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் 3 மாத காலத்திற்குள் ஒரு முறையாவது ரேஷனில் பொருட்களை வாங்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு காலாவாதியானதாகக் கருதப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து இந்தியக் குடிமக்களும் தங்களது பொருட்களை முறையாக பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

More News

தீக்குளிக்க முயன்றவரை தைரியமாக காப்பாற்றிய பெண் காவலர்கள்: வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

சாலையில் ஒரு விபத்து நடந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் ஒருவர் ஈடுபடும்போதோ சுற்றி நிற்பவர்கள் வேடிக்கை பார்ப்பதும், மொபைல் போனில் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில்

இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? அன்பு குரூப் மேலும் உடையுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் காரசாரமாக நடந்தது என்றும் அர்ச்சனா மற்றும் ரியோ ஆகிய இருவரையும் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்தனர்

இறந்து போன அம்மா குறித்து பாலா பேசியது என்ன?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் பாலாஜி முருகதாஸ் மிகவும் சிறப்பாக தற்போது விளையாடி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

2020ல் டுவிட்டரில் பிரபலமான நடிகை யார்? லிஸ்ட்லேயே இல்லாத நயன்தாரா!

2020 ஆம் ஆண்டில் டுவிட்டரில் அதிகமாக பிரபலமான திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வந்தோம். குறிப்பாக தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் டுவிட்டரில் அதிகளவு

சித்ராவின் தற்கொலைக்கு யார் காரணம்? சித்ரா தாயார் அதிர்ச்சி பேட்டி

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தனியார் ஓட்டல் ஒன்றில் தற்கொலை செய்து கொண்டார்.