'வாடிவாசல்' படத்திற்கு முன் சூர்யாவின் இன்னொரு படம்.. இயக்குனர் இவர் தான்..!

  • IndiaGlitz, [Monday,June 17 2024]

நடிகர் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமான் தீவுகளில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படம் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படமாக தான் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென ’வாடிவாசல்’ படத்திற்கு முன்பே சூர்யா ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சூர்யாவின் 45வது திரைப்படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ் லீ’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பிரசாந்த் பாண்டிராஜ் ஆகிய இருவரது படங்களையும் முடித்த பிறகு தான் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

சூர்யாவின் 'புறநானூறு' டிராப்.. சுதா கொங்கராவின் அடுத்த பட ஹீரோ இவரா?

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற திரைப்படம் உருவாகியிருந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் திடீரென இந்த படம் ட்ராப் என்று கூறப்பட்டது

அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைத்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்.. திவால் என அறிவிக்கப்படுவாரா?

அரவிந்த்சாமிக்கு சம்பள பாக்கி வைத்த தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர் தன்னிடம் சொத்து இல்லை என்றால் திவால் ஆனவர் என்று அறிவிக்கலாம் என்றும் நீதிபதி கூறி இருப்பது

நவபாஷாணத்தின் அற்புத ரகசியங்கள் - ஆன்மீகக்ளிட்ஸில் ஞானகுரு சிவா விளக்கம்

ஆன்மீக சிந்தனையாளர் ஞானகுரு சிவா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி, நவபாஷாணம் என்ற ரகசியமான உலகம் குறித்த பல கேள்விகளுக்கு விடை அளித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

2024ன் அதிக ஓப்பனிங் வசூல்.. 'மகாராஜா' தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

2024 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அதிகபட்ச ஓப்பனிங் வசூல் 'மகாராஜா' திரைப்படம் தான் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

ரூ.6 கோடி கேட்டு மிரட்டியதாக தயாரிப்பாளர் புகார்.. அவதூறு வழக்கு தொடர்ந்த  பிரபல நடிகை..!

நடிகை தன்னிடம் ஆறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக தயாரிப்பாளர் ஒருவர் கூறியுள்ள நிலையில் அவர் மீது நடிகை அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.