close
Choose your channels

'வாடிவாசல்' படத்திற்கு முன் சூர்யாவின் இன்னொரு படம்.. இயக்குனர் இவர் தான்..!

Monday, June 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அந்தமான் தீவுகளில் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படம் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படமாக தான் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென ’வாடிவாசல்’ படத்திற்கு முன்பே சூர்யா ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சூர்யாவின் 45வது திரைப்படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த ’புரூஸ் லீ’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பிரசாந்த் பாண்டிராஜ் ஆகிய இருவரது படங்களையும் முடித்த பிறகு தான் அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment