திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன் கமல் கையிலெடுக்கும் முக்கிய பிரச்சனை

  • IndiaGlitz, [Saturday,February 24 2018]

உலக நாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' 'என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். முதல் பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல பிரபலங்களை கலந்து கொள்ள வைத்து அரசியல் கட்சிகளை ஆச்சரியப்படுத்தினார்

இந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி திருச்சியில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெறும் என்று அவர் நேற்றைய பேட்டியில் தெரிவித்தார்

இந்த நிலையில் ஏப்ரல் 4ல் நடைபெறவுள்ள திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன்னர், நெடுவாசல் கிராம மக்களை நேரில் சந்திக்க கமல் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் கிராம மக்களை கமல்ஹாசன் சந்தித்தால், போராட்டக்காரர்களுக்கு மிகப்பெரிய பலம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நெடுவாசல் போராட்டம் என்பது மத்திய அரசுக்கு எதிரானது என்பதால் கமல், மத்திய அரசையும் எதிர்க்க துணிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

More News

ஒரே கல்லில் பல மாங்காய்கள்: கமல்ஹாசனின் அதிரடி திட்டம்

உலகநாயகன் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கி தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

இது எந்திரன் டைப் படமல்ல: ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய புதிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் என்றவுடன் கோலிவுட்டில் பலர் ஆச்சரியப்பட்டனர்.

'காலா' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தனுஷ்

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தனுஷ் கடந்த சில வாரங்களுக்கு முன் தனது டுவிட்டரில் பதிவு செய்தார்

த்ரிஷாவிடம் குத்து வாங்கிய அதிர்ஷ்டகாரர்

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா. இவருடன் நடித்த நடிகைகள் பலர் அக்கா, அம்மா வேடங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து கொண்டிருக்கும் நிலையில்

ஜாக்குலினை அடுத்து சினிமாவில் அறிமுகமாகும் ரக்சன்

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான ஜாக்குலின், ரக்சன் ஏற்கனவே பிரபலம் அடைந்த நிலையில், ஜாக்குலின், நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்தில் அவருக்கு சகோதரியாக நடித்துவருகிறார்