ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை அளித்த பிசிசிஐ!

  • IndiaGlitz, [Tuesday,May 04 2021]

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இதுவரை 29 போட்டிகள் நடைபெற்று உள்ள நிலையில் நேற்று நடைபெற வேண்டிய 30வது போட்டி திடீரென ஒத்திவைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. நேற்றைய போட்டி கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடைபெற இருந்த நிலையில் கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த போட்டி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி உள்பட மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நாளை நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியும் நடைபெறாது என்றும் தகவல் வெளிவந்தது. அதுமட்டுமின்றி இன்று நடைபெறும் ஐதராபாத்-மும்பை போட்டியும் நடப்பது சந்தேகமே என்று கூறப்பட்டது

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ஐபிஎல் போட்டிகள் ரத்து என பிசிசிஐ அறிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்ட ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்டில் போட்டி முழுவதும் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது ஐபிஎல் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ராணியாக மாறிய ரம்யா பாண்டியன்: வைரல் வீடியோ

பிக்பாஸ் மற்றும் 'குக் வித் கோமாளி சீசன் 1 ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் ஏராளமான ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். 'ஜோக்கர்', 'ஆண் தேவதை' உள்ளிட்ட

ஆக்சிஜன் குறித்த போலி செய்தி: பிரபல நடிகையின் டுவிட்டர் பக்கம் முடக்கம்!

தமிழ் ஹிந்தி உள்பட பல மொழிகளில் நடித்து கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவரின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முட்டாள்தனமான வாதம்: நெட்டிசனின் கருத்துக்கு பதிலடி கொடுத்த ப்ரியா பவானிசங்கர்!

தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள முக ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்த நடிகை ப்ரியா பவானிசங்கர் டுவீட்டுக்கு முட்டாள்தனமான வாதம் என நெட்டிசன் ஒருவர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை காப்பாற்ற விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவரை காப்பாற்றுவதற்காக விமான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த நடிகர் ஒருவர் குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

'த்ரிஷ்யம் 2' ரீமேக் குறித்த அதிகாரபூர்வ தகவல்: நடிகர், நடிகையர் யார் யார்?

மோகன்லால், மீனா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது என்பதும் ஓடிடியில் வெளியான போதிலும் இந்த படம் நல்ல வசூலை வாரி குவித்தது