ஏடிஎம்இல் பணம் எடுக்க 6 மணி நேரம் இடைவெளி: வங்கியாளர் குழு பரிந்துரை

  • IndiaGlitz, [Wednesday,August 28 2019]

போலி ஏடிஎம் கார்டு மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க 6 முதல் 12 மணிநேரம் இடைவெளியைக் கட்டாயமாக்க டெல்லி வங்கியாளர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

நள்ளிரவு முதல் அதிகாலை முதல் அதிக ஏடிஎம் மோசடி நடப்பதால் நள்ளிரவில் மட்டும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால் நள்ளிரவில் இனிமேல் ஒருமுறை மட்டுமே ஏடிஎம்-இல் பணம் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் ஒவ்வொரு முறை ஏடிஎம்-இல் இருந்து பணம் எடுக்கும்போது ஓடிபி என்ற ஒருமுறை பாஸ்வேடு பயன்படுத்தி பணம் எடுக்கும் முறையை அறிமுகம் செய்யவும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கி இதனை ஒருசில ஏடிஎம்களில் மட்டும் நடைமுறைப்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இடைவெளி விட்டு பணம் எடுப்பது, ஒடிபி மூலம் பணம் எடுப்பது ஆகிய இரண்டையும் அமல்படுத்தினால் ஏடிஎம் மோசடி பெருமளவு குறையும் என்பதே இந்த குழுவின் பரிந்துரையாக இருப்பதால் விரைவில் இந்த முறை நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

தனுஷ் ரசிகர்களுக்கு டபுள் விருந்து: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

தனுஷ் நடித்த 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகும்

விலையில்லா விருந்தகம்: விஜய் ரசிகர்களின் அசத்தல் முயற்சி!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஜய்யின் பிறந்தநாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சென்னையில்

அஜித்துக்கு பாராட்டு தெரிவித்த த்ரிஷா!

அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் ஒரு ரீமேக் படம் என்பதாலும், இந்த படத்தின் கரு தென்னிந்தியாவுக்கு பொருந்தாது

ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, அருவி, என்.ஜி.கே உட்பட பல திரைப்படங்களை தயாரித்த முன்னணி நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'கைதி' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது 

'நேர்மை' டுவீட்டால் சமுத்திரக்கனி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தின் இரண்டாம் பாகமாக 'அடுத்த சாட்டை' என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தை இயக்கிய அன்பழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள