பெண் வங்கி ஊழியரை பலாத்காரம் செய்து உயிரோடு எரித்த கொடூரம்: ஆந்திராவில் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Thursday,December 24 2020]

ஆந்திராவில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதன் பின்னர் உயிரோடு எரித்துக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண் வங்கி ஊழியர் ஒருவர் நேற்று வேலை முடிந்து வீடு திரும்பும்போது கடத்தப்பட்டதாக தெரிகிறது. அதன் பின்னர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது

இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற சென்ற பெண் வங்கி ஊழியர் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை தேடினர். மகள் குறித்து எந்தவித தகவலும் தெரியாததால் தர்மவரம் காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் பெண் வங்கி ஊழியரை போலீசார் தேடிக் கொண்டிருந்த நிலையில் தர்மபுரம் சாலையோரம் எரிக்கப்பட்ட நிலையில் இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது

இதனை அடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்த போது எரித்து கொல்லப்பட்டவர் காணாமல் போன தங்கள் மகள் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர். பெண் வங்கி ஊழியரை மர்ம கும்பல் ஒன்று கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அதன் பிறகு எரித்து கொன்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது

இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்ததில் ராஜேஷ் என்ற இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்து வருவதாக வருவதாக கூறப்படுகிறது. பெண் வங்கி ஊழியர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே கடந்த ஆண்டு தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேர்கள் என்கவுண்டரில் ஹைதராபாத் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'பாவக்கதைகள்' நரிக்குட்டிக்கு வாய்ஸ் கொடுத்தது இவரா? விக்னேஷ் சிவன் உடைத்த ரகசியம்!

சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'பாவக்கதைகள்' என்ற ஆந்தாலஜி திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே. சுதா கொங்கராவின் 'தங்கம்', விக்னேஷ் சிவனின் 'லவ் பண்ணா உட்றனும்'

லண்டனை சேர்ந்த ஒருவர் சென்னை சிறையில் உயிரிழப்பு… புதியவகை கொரோனா காரணமா???

சென்னை- பூந்தமல்லி கிளை சிறைச் சாலையில் லண்டனை சேர்ந்த ஒருவர் (கைதி) திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து உள்ளார்.

வெள்ளை மாளிகையை விட்டு கிளம்பும்போது மன்னிப்பை வாரி வழங்கும் டிரம்ப்? சம்பந்திக்கும் சகாயமா???

கடந்த நவர்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவை அந்நாட்டு தேர்தல் குழு அறிவித்து விட்டது.

குரூப்பிஸம் என்றால் என்ன? ரியோவுக்கு ஆங்கிலம் கற்று கொடுத்த ஆரி!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடைபெற்ற பந்து டாஸ்க்கில் ஆரி மற்றும் ரியோ இடையே க்ளைமாக்ஸில் கடும் வாக்குவாதம் நடந்தது என்பது தெரிந்ததே. ஒன்று முதல் ஒன்பது வரையிலான ரேட்டிங் பிரிக்கும்போது

இந்த வாரம் ஜெயிலுக்கு போவது யார்? அனிதா-பாலா காரசார விவாதம்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் டாஸ்குகள் விளையாடியதன் அடிப்படையிலும் மற்ற வேலைகளை செய்ததன் அடிப்படையிலும் இரண்டு சிறந்த போட்டியாளர்கள் மற்றும் இரண்டு மோசமான போட்டியாளர்கள்