ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்ரீதிவ்யா

  • IndiaGlitz, [Sunday,February 07 2016]

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் குடிபுகுந்த நடிகை ஸ்ரீதிவ்யா, அதன்பின்னர் காக்கி சட்டை, வெள்ளக்கார துரை, ஈட்டி, போன்ற ஹிட் படங்களில் நடித்து முன்னணி இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் ஸ்ரீதிவ்யா நடித்த 'பெங்களூர் நாட்கள்' நேற்று முன் தினம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசியுள்ளார். ஸ்ரீதிவ்யாவின் நடிப்பிற்கும், டப்பிங் குரலுக்கும் ஏராளமான பாராட்டுக்கள் சமூக வலைத்தளங்காளில் குவிந்து வருகிறது.

ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் ரசிகர்கள் வாழ்த்துமழை பொழிவதை கண்ட ஸ்ரீதிவ்யா, மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன்னை பாராட்டிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இனிவரும் படங்களிலும் சொந்தக்குரலில் டப்பிங் செய்ய இந்த வாழ்த்துக்கள் தனக்கு உந்துதலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

'வேதாளம்' ரீமேக்கில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய 'வேதாளம்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரூ.125...

கிருஷ்ணாவின் 'யாக்கை' சிங்கிள் டிராக் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யாவுடன் இரண்டாவது ஹீரோவாக நடித்த கிருஷ்ணா, தற்போது நாயகனாக விழித்திரு...

சென்னை மக்களுக்காக உண்டியல் ஏந்தும் தெலுங்கு நடிகர்கள்

கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்...

விமல்-நந்திதாவின் 'அஞ்சல' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு விமல் நடித்த 'காவல்' என்ற ஒரே படம் மட்டுமே வெளியாகி சுமாராக ஓடிய நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'அஞ்சல'...

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை' இசையமைப்பாளர் அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் விசாரணை ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார்...