போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள்:  பாலா பாராட்டிய படம்..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

இன்று வெளியாகியுள்ள திரைப்படத்தை பார்த்த தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இந்த படத்தில் நடித்தவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள் என்று கூறியுள்ளார். அவர் கூறியது ’கொட்டுக்காளி’ படத்தின் குழுவினர்களை தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று. இந்தக் கொட்டுக்காளி.

ஆழமான இக்கதையை, எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார், இயக்குனர் வினோத் ராஜ். குறிப்பாக, சூரி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து, ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி, ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது.

படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில், மிக அழுத்தமான நடிப்பை தந்திருக்கிறார் நாயகி, அன்னா பென், படத்தில் நடித்திருக்கும் அனைவருமே, தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம் தான் என்று சவால் விட்டிருக்கிறார்கள்.

காட்சியை வழி நடத்திச் சென்ற ஒளிப்பதிவாளர் சக்திவேல், மிகவும் போற்றுதலுக்குரியவர். சிவகார்த்திகேயனுக்கு, வினோத்ராஜ் சார்பாக, எனது நன்றிகள். சூரி மற்றும் வினோத்ராஜ் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் மட்டுமல்ல, கை கூப்பி வணங்கப்பட வேண்டியவர்கள். கொட்டுக்காளி படக்குழுவினர் அனைவரும் உயர்ந்து நிற்கிறார்கள்.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த படம்.. இயக்குனர், தயாரிப்பாளர், நாயகி அறிவிப்பு..!

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மனைவியின் தாய்ப்பாலை திருடி குடித்த பிரபல நடிகர்.. புத்தகத்தில் வெளியான பரபரப்பு தகவல்..!

பிரபல பாலிவுட் நடிகர் தனது மனைவியின் தாய்ப்பாலை திருடி குடித்ததாக அவரது மனைவி எழுதிய புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன ஆச்சு தொகுப்பாளினி அஞ்சனா ரங்கனுக்கு.. சர்ஜரிக்கு பின் வெளியான வீடியோ..!

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரஞ்சனுக்கு சர்ஜரி செய்யப்பட்ட நிலையில் சர்ஜரிக்கு பின் அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை விற்பனையாகாத தொகை.. 'கங்குவா' பிசினஸில் ஆச்சரியம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ்

சினிமாவில் நடிக்காவிட்டால் செத்துவிடுவேன்: மத்திய அமைச்சர் பேச்சால் பரபரப்பு..!

மத்திய அமைச்சராக இருக்கும் பிரபல நடிகர் சினிமாவில் நடிக்காவிட்டால் நான் செத்து விடுவேன் என்று சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.