பாலாவின் 'அவன் இவன்' பட நடிகர் காலமானார்; திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Tuesday,July 12 2022]

இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ’அவன் இவன்’. கடந்த 2011ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

’அவன் இவன்’ திரை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர் நடிகர் ராமராஜன். இவர் இந்த படத்தின் வெற்றியை அடுத்து சில படங்களில் குணசித்திர நடிகராக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சாக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருடைய சகோதரர் பாரதிராஜாவிடம் மேனேஜராக இருந்ததால் அவர் மூலம் இவருக்கு பாலாவின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

’அவன் இவன்’ திரைப்படத்திற்கு பின் ஒருசில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதிலும், ‘அவன் இவன்’ படம் மட்டுமே இவருக்கு பெயரும் புகழும் பெற்று கொடுத்தது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ராமராஜன் சிகிச்சையின் பலனின்றி இன்று காலமானார். அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

நயன்தாராவின் 75வது படத்தில் யார் யார் இருக்காங்க தெரியுமா? சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் விபரங்களை தற்போது பார்ப்போம்.

'தி லெஜண்ட்' படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம்!

பிரபல தொழிலதிபர் அருள் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

'உறியடி' விஜயகுமாரின் அடுத்த படம்: இயக்குனர் இவர் தான்!

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.  இப்படத்தை சேத்துமான் புகழ் தமிழ் இயக்குகிறார். 

இனி பயணம் செய்து கொண்டே புதுப்படம் பார்க்கலாம்: வெறும் ரூ.30 தான்!

 திரையரங்குகளில் சென்று மட்டுமே படம் பார்க்க முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது வீட்டில் இருந்துகொண்டே ஓடிடி மூலம் புதிய திரைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

நெஞ்சுல கை வச்சா உடனே ஹார்ட் அட்டாக்கா? 'கோப்ரா' இசை வெளியீட்டில் விக்ரம் பேச்சு!

நடிகர் சியான் விக்ரம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் லேசான நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.