சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தை இயக்கும் தேசிய விருது இயக்குனரின் உதவியாளர்

  • IndiaGlitz, [Sunday,April 08 2018]

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரையுலக வாரீசான சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுரவீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்றது. இந்த நிலையில் சண்முகப்பாண்டியன் மூன்று இயக்குனர்களிடம் கதை கேட்டுள்ளதாகவும், அவர்களில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் உதவியாளர் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

பாலாவின் உதவியாளர் பாலாசத்யா என்பவர் இயக்கத்தில் உருவாகும் சண்முகப்பாண்டியனின் அடுத்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் படம் என்றும், இந்த படம் இந்திய ராணுவத்தை குறித்த கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

சண்முகப்பாண்டியன் தற்போது அமெரிக்காவில் இருப்பதாகவும், அவர் சென்னை திரும்பிய பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகர் சங்கத்தின் அறப்போராட்டம்: முதல் நபராக மேடையேறிய தளாபதி விஜய்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடிகர் சங்கம் சார்பில் அடையாள அறப்போராட்டம் நடைபெறுகிறது.

இந்தியாவுக்கு மேலும் இரண்டு தங்கம்: அசத்தும் இந்திய வீராங்கனைகள்

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூனம் யாதவ் என்ற வீராங்கனை பளுதூக்கும் பிரிவில் 69 கிலோ எடைப் பிரிவில் இன்று தங்கம் பெற்றுள்ளார். இவர் மொத்தம் 222 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதித்துள்ளார்.

பளுதூக்கும் போட்டியில் மேலும் ஒரு தங்கம்: இந்தியா அசத்தல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்கும் போட்டியில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் இந்தியா தங்கம் பெற்றுவிடும்போல் தெரிகிறது.

சல்மான்கான் ஜாமீன் மனு: ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சல்மான்கானின் ஜாமீன் மனு இன்று விசாரணை செய்யப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

சினிமாவில் உலக நாயகன்: அரசியலில் நகைச்சுவை நாயகன்; செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர்களில் நெட்டிசன்களால் அதிகம் கலாய்க்கப்பட்டவர் அமைச்சர் செல்லூர் ராஜு தான் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தெர்மோகோல் குறித்த மீம்ஸ்கள் பல நாட்கள் டுவிட்டரில் டிரெண்ட்டாக இருந்தது