ஜல்லிக்கட்டை காப்பாற்ற கைகோர்ப்போம், ஜெயிப்போம். கீர்த்திசுரேஷ்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

தமிழர்களின் பாரம்பரிய, கலாச்சார, பண்பாடான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டை காப்பாற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் இரவு பகல் பாராது, கடுங்குளிரில் கடந்த மூன்று நாட்களாக சென்னை மெரீனா கடற்கரை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு நடிகர், நடிகைகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். நேற்று பிரபல நடிகை நயன்தாரா தனது ஆதரவை போராடும் இளைஞர்களுக்கு தெரிவித்த நிலையில் இன்று இன்னொரு பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டு இந்த மஞ்சுவிரட்டு என்ற ஜல்லிக்கட்டு. வாழையடி வாழையாக வரும் நம் தமிழர்களின் பாரம்பரிய மிக்க விளையாட்டு இது. இதை அழியாமல் காப்பாற்றுவது தமிழர்களின் கடமை. இதற்காக போராடும் இளைஞர்களுக்கு எனது ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். இளைஞர்களுடன் போராடும் பெண்களுக்கு எனது தனிப்பட்ட ஆதரவை தெரிவித்து கொள்கிறேன். இதற்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம், செயல்படுவோம், ஜெயிப்போம். இவ்வாறு நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

More News

டெல்லியில் இருந்து முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்பாதது ஏன்? புதிய தகவல்

இந்நிலையில் இன்று மாலை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் இன்னும் திரும்பவில்லை. டெல்லியில் முதல்வர் ஓபிஎஸ் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் ஜல்லிக்கட்டை உடனே நடத்த தமிழக அரசே அவசர சட்டம் இயற்றக்கூடிய வாய்ப்பு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது...

இனி நாங்கள் இந்தியர் இல்லை. மெரினாவில் தூக்கி எறியப்பட்ட ஆதார் அட்டைகள்

தமிழ் பண்பாட்டை, கலாச்சாரத்தை காக்க போராடி வரும் இளைஞர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவங்கள் நிரூபணம் செய்து வருகிறது...

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் தரத்தயார். பிரபல நடிகர்

ஜல்லிக்கட்டு நடத்த கோரியும், பீட்டா அமைப்பினை தடை செய்ய கோரியும் லட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம். ஏ.ஆர்.ரஹ்மான்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் நாளை ஒருநாள் மெளன அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர்களும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு கலந்து கொள்ளவுள்ளனர்...

ஜல்லிக்கட்டுக்காக திமுகவை எதிர்க்க திட்டமா? அருள்நிதியின் அதிரடி பதில்

ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற்றே தீரவேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும்...