மகன் விஷயத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு மேலும் அதிர்ச்சி கொடுத்த NCB அதிகாரிகள்!

மும்பை அருகே சொகுசு கப்பலில் போதைப்பொருள் பார்டி நடத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 8 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சார்பாக ஜாமீன் மனு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டதோடு NCB காவல் 7 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. தற்போது விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் சில தினங்களுக்கு அவருடைய NCB காவல் நீடிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனால் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் புது படத்திற்கான படப்பிடிப்பையும் அவர் ரத்து செய்துவிட்டார். அதேபோல அஜய் தேவ்கனுடன் இணைந்து இவர் நடித்துவரும் விளம்பரப் படத்திற்கான படப்பிடிப்பையும் ரத்து செய்துவிட்டு தனது மகன் ஜாமீன் விஷயத்திற்காக அலைந்து வருகிறார்.

இந்நிலையில் ஆர்யன் கானின் ஜாமீன் வழக்கு குறித்து மும்பை நீதிமன்றத்தில் பேசிய NCB அதிகாரிகள் அவருடைய செல்போனில் ரகசிய வார்த்தைகள் இருந்ததாகவும் இதனால் சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப் படுவதாகவும் வாதத்தை வைத்திருந்தனர். இதனால் முதலில் ஜாமீன் மனு ரத்துச் செய்யப்பட்டு 7 ஆம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டது.

தற்போது மேலும் சில தினங்களுக்கு NCB காவல் நீடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் போதைப்பொருள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே குறித்தும் சில ஊடகங்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றனர். இவர் நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கில் போதைப்பொருள் தொடர்பான வழக்கை விசாரணை செய்தவர். தற்போது ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் தொடர்பான வழக்கையும் இவர்தான் விசாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மைதானத்திலேயே காதலியை கரம் பிடித்த தீபக் சஹார்: வைரல் வீடியோ!

இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டியில் சென்னை அணி படு தோல்வி அடைந்தாலும் தீபக் சஹார் தனது வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டார்

மீண்டும் இணைந்த தனுஷ்-மாளவிகா மோகனன்!

தனுஷ் நடித்துவரும் 'மாறன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னையில் தொடங்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் தனுஷூடன் மாளவிகா மோகனன்

ரஜினி மருமகனின் நண்பர், விஜய் படத்தால் பிரபலம்: பிக்பாஸ் போட்டியாளரின் இன்னொரு பக்கம்!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவரான நடிகர் சிபி சக்கரவர்த்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் விசாகனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பதும் அது மட்டுமின்றி தளபதி விஜய்

விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தாவுக்கு கிடைத்த ரூ.25 லட்சம்!

பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் நடிகை சமந்தா சமீபத்தில் தனது விவாகரத்து  அறிவிப்பை வெளியிட்ட நிலையில் தற்போது அவருக்கு ரூபாய் 25 லட்சம் கிடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில்

இயக்குநர் சுந்தர்.சி-க்கு யோகி பாபு கொடுத்த அட்டகாசமான பரிசு… வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் தற்போது பல படங்க&