பிறந்த குழந்தைக்கு 27 வயதா??? சாதனை சம்பவத்தால் உறைந்து போன பெற்றோர்கள்!!!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

 

அமெரிக்காவின் டெல்லிஸி மாகாணத்தில் 27 வருடங்களாக உறை பனியில் சேகரித்து வைக்கப்பட்ட கரு முட்டையில் இருந்து ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது. உலகில் இத்தனை பெரிய சாதனையானது இதற்கு முன் நிகழ்ந்ததே இல்லை என்றும் கூறப்படுகிறது. பொதுவாக குழந்தை இல்லாத பெற்றோர்கள் கருமுட்டையை கடனாகப் பெற்று குழந்தையைப் பெற்றுக் கொள்வது மருத்துவத் துறையில் இயல்பான ஒன்றாக மாறி வருகிறது.

இந்நிலையில் 27 வருடங்களுக்கு முன்பு தானமாகப் பெறப்பட்ட கருமுட்டையில் இருந்து ஒரு தம்பதியினர் குழந்தையைப் பெற்றுக்கொண்ட சம்பவம் கடும் மலைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 27 வருடங்களுக்கு முன்பு உறைபனியில் சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டையை டெல்லிஸி மாகாணத்தில் உள்ள டின்- பென் கிப்சன் எனும் தம்பதியினர் தானமாகப் பெற்றுக் கொண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் குழந்தை பெற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குழந்தைக்கு மோலி கிப்சன் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த அந்தத் தம்பதியினர் மோலி எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி எனத் தெரிவித்து உள்ளனர். மேலும் மோலியின் அக்கா எம்மா கிப்சனும் 24 வருடமாக உறைபனியில் சேகரித்து வைக்கப்பட்டு இருந்த கருமுட்டையில் இருந்த வந்தவள் தான் என்பதையும் அந்தத் தம்பதியினர் தெரிவித்து உள்ளனர். இதனால் ஒரே வீட்டில் உலகத்தின் 2 பெரிய சாதனை சம்பவம் நிகழ்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக மலட்டுத் தன்மையில் சிக்கி தவித்த இந்தத் தம்பதியினர் 2 பெரிய சாதனை குழந்தைகளுடன் தற்போது உலா வருவது பலருக்கும் மகிழ்ச்சியை அளித்து இருக்கிறது.

More News

பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத வைல்ட்கார்ட் எண்ட்ரி? 

பிக்பாஸ் வீட்டில் தனி திறமையுடன் விளையாடிக்கொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவர் சனம்ஷெட்டி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதாக விமர்சனம் செய்யப்பட்டாலும்

இவரை என்னால் பாராட்டால் இருக்க முடியாது: நடராஜன் குறித்து ஆஸ்திரேலிய வீரர்!

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக யார்க்கர்கள் வீசி புகழ்பெற்ற நடராஜன் தற்போது இந்திய அணியில் தவிர்க்க முடியாத

மகள் மரணத்தில் சந்தேகம்: சித்ராவின் தாய் கண்ணீர் பேட்டி

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலையில் சென்னை நாசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டல் அறை ஒன்றில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். 

பாலாஜியை பழிவாங்க அர்ச்சனாவுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற 'புதிய மனிதா' என்ற டாஸ்க்கில் பாலாஜி அணி மனிதர்கள் அணியாகவும், அர்ச்சனா அணி ரோபோ அணியாகவும் விளையாடினார்கள்.

'மாநாடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: சிம்பு ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.