'பாகுபலி 2' வீடியோ லீக் விவகாரம். மேலும் 6 பேர் கைது.

  • IndiaGlitz, [Friday,November 25 2016]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி வரும் 'பாகுபலி 2' படத்தின் வீடியோ க்ளிப்பிங்கை வெளியிட்ட கிருஷ்ணா என்பவர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் கிருஷ்ணாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது நண்பர் ஒருவருக்கு அந்த வீடியோவை ஃபார்வேர்ட் செய்ததாகவும், அவருடைய நண்பர் மேலும் ஐந்து பேர்களுக்கு வீடியோவை அனுப்பியதாகவும் தெரியவந்தது. இவர்கள் ஆறு பேர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி'யை கட்டப்பா கொலை செய்தது ஏன்? என்பது உள்பட இந்த படத்தின் அனைத்து காட்சிகளும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வீடியோ லீக் ஆனது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எடிட்டிங் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவின் லேப்டாப்பில் நாகார்ஜுனா, அனுஷ்கா நடித்து வரும் 'ஓம் நமோ வெங்கடேசாயா' என்ற தெலுங்கு படத்தின் வீடியோ க்ளிப்பிங்கும் இருந்ததாக கூறப்படுகிறது.