'பாகுபலி' இயக்குனருக்கு ஆந்திர முதல்வர் வைத்த கோரிக்கை

  • IndiaGlitz, [Saturday,December 10 2016]

இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று 'பாகுபலி'. கடந்த ஆண்டு வெளிவந்த இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.ஆந்திர பிரதேச மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டாக பிரிந்த பின்னர் ஆந்திர மாநிலத்திற்காக தலைநகர் ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அமராவதி என்று கூறப்படும் இந்நகரத்தின் வடிவமைக்கும் பணி லண்டனை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நகரத்தின் வடிவமைப்பில் இந்திய பாரம்பரியத்தை கொண்டு வர உதவி செய்யுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ராஜமெளலி விரைவில் லண்டன் குழுவினர்களிடம் அமராவதி நகர் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
இதுவரை திரைப்படத்திற்காக மட்டுமே பெரிய பெரிய நகரங்களை கலை இயக்குனர்களின் உதவியால் உருவாக்கி வந்த எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது நிஜ நகரத்தையும் உருவாக்க தனது ஐடியாக்களை கூறவிருக்கின்றார்.

More News

'கருப்பு ராக்' ஆக மாறும் மொட்டை ராஜேந்திரன்

வில்லன் நடிகராக திரையுலகில் நுழைந்து தற்போது நகைச்சுவை வேடங்களில் வெளுத்து கட்டி வரும் 'மொட்டை' ராஜேந்திரன்...

'விஜய் 61' படத்தின் நாயகி குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'விஜய் 61' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' வெற்றி படத்தை அடுத்து இயக்குனர் விஜய், ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

புதுப்பொலிவுடன் ஜெயலலிதா நினைவகம் தயாராவது எப்போது?

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வெங்கட்பிரபுவின் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து கூறிய பிரமாண்ட இயக்குனர்

வெங்கட்பிரபு இயக்கிய முதல் திரைப்படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகம் 'சென்னை 600028 II' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது