close
Choose your channels

'பாகுபலி 2' படத்தின் கிளைமாக்ஸ் பிரமாண்டமான திட்டம்

Tuesday, June 7, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய பகுதியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பு வரும் 13ஆம் தேதி தொடங்கவுள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் Shobu Yaralagada தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளதாகவும், மொத்தம் 10 வாரங்கள் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தில் இரண்டு முக்கிய ரகசியங்கள் வெளிப்படவுள்ளது. அனுஷ்காவின் இளமைக்கால வாழ்க்கையில் நடந்தது என்ன? மற்றும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார்?. இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் வகையில் 'பாகுபலி 2' இருக்கும் என்பதால் முதல் பாகத்தின் வசூலை இந்த படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment