அமலாபாலை சந்தித்தது ஏன்? கைதான தொழிலதிபர் வாக்குமூலம்

  • IndiaGlitz, [Thursday,February 01 2018]

பிரபல நடிகை அமலாபால் நேற்று தன்னை தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அழகேசன் என்ற 40வயது தொழிலதிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

போலீஸ் விசாரணையில் தான் அமலாபாலை சந்திக்க சென்றது ஏன் என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். மலேசியாவில் உள்ள தொழிலதிபரின் பார்ட்டி ஒன்றுக்கு அமலாபால் வர சம்மதித்ததாகவும், அந்த பார்ட்டியில் அமலாபால் கலந்து கொள்வதை உறுதி செய்ய மலேசிய தொழிலதிபர் தன்னிடம் அமலாபால் மேனேஜர் எண்ணை கொடுத்ததாகவும், இதனையடுத்து தான் அமலாபால் மேனேஜரை தொடர்பு கொண்டபோது, அமலாபால் நடனப்பயிற்சியில் உள்ளதாகவும், அங்கு சென்று அவரை பார்க்குமாறு கூறியதாகவும் தொழிலதிபர் அழகேசன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்

ஆனால் அமலாபாலின் மேனேஜர், அழகேசன் தனக்கு போன் செய்யவில்லை என்றும், அமலாபால் இருக்குமிடத்தை அவரே தெரிந்து கொண்டு நடனப்பயிற்சி செய்யும் இடத்துக்கு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

தனிநபர் வருமான வரி, ஜனாதிபதி சம்பள உயர்வு: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் ஒருசில முக்கிய அம்சங்களை ஏற்கனவே பார்த்தோம்.

பள்ளிகளில் டிஜிட்டல் போர்டுகள், கிசான் கிரெடி கார்டு வசதி: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் 2018-2019க்கான பட்ஜெட்டை தற்போது வாசித்து வருகிறார்.

ஊட்டியாக மாறிய சென்னை

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் அடித்து வருவதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இன்னும் கொஞ்சம் சேர்த்து பேசியிருக்கணும்: 'நாச்சியார்' வசனம் குறித்து ஜோதிகா

பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த 'நாச்சியார்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானபோது, அந்த டீசரின் முடிவில் ஜோதிகா பேசிய கெட்டவார்த்தை ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளானது.

ரிலீஸ் நாளில் ஆன்லைனிலும் வெளியாகிறது 'மதுரவீரன்

தமிழ்த்திரையுலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், தமிழ்ராக்கர்ஸ் உள்பட ஒருசில இணையதளங்கள் ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் நாளிலேயே திருட்டுத்தனமாக ஆன்லைனில் ரிலீஸ் செய்வதுதான்.