விஜய்சேதுபதியின் சிலையை திறந்து வைத்த பழம்பெரும் இயக்குனர்

  • IndiaGlitz, [Monday,December 03 2018]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ள நிலையில் அவர் நடித்த 25வது படமான 'சீதக்காதி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளிவரவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சீதக்காதி' திரைப்படத்தில் விஜய்சேதுபதி 'அய்யா ஆதிமூலம்' என்ற கேரக்டரில் தத்ரூபமாக நடித்துள்ளார். இந்த நிலையில் நேற்று சென்னையில் புகழ்பெற்ற மால் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்த 'அய்யா ஆதிமூலம்' சிலை திறக்கப்பட்டது. இந்த சிலையை பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் திறந்து வைத்தார். இவர் இந்த படத்தில் நீதிபதி கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அர்ச்சனா, மகேந்திரன், மெளலி, பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை 'பாஷன் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.

 

More News

'2.0' படத்தை சிம்பு எங்கே பார்த்தார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்

ரஜினியின் '2.0' வசூல் குறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் தகவல்

ரஜினியின் '2.0' குறித்த பல தகவல்களை அவ்வபோது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

நயன்தாரா நாயகனின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட ஐஸ்வர்யா தத்தாவுக்கு கடந்த சில வாரத்தில் ஒருசில திரைப்படங்கள் ஒப்பந்தமாகி வருவது தெரிந்ததே.

நாசர் மகனை நெகிழ்ச்சி அடைய செய்த விஜய்

நடிகர் சங்க தலைவர் நாசரின் மகன் பைசல் கடந்த 2014ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்து மறுபிறவி எடுத்து பிழைத்தார்

சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் தமிழ் படங்கள்

கடந்த 15 ஆண்டுகளாக சென்னையில் சர்வதேச சென்னை திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் 16வது விழா வரும் 3ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது