'ஆயிரத்துள் ஒருவன் 2' எப்போது? செல்வராகவனின் பதில்

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. சோழ சாம்ராஜ்யம் குறித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் தன்னுடைய நீண்ட நாள் தாகம் என்று செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் 'புதுப்பேட்டை 2' எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்.

செல்வராகவனின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். 'புதுப்பேட்டை 2' அல்லது 'ஆயிரத்தில் ஒருவன் 2' எந்த படமாக இருந்தாலும் வரவேற்க தயாராக இருப்பதாக பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துள்ளனர். செல்வராகவன் தற்போது இயக்கி வரும் 'என்.ஜி.கே' படத்தை அடுத்து 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

More News

ரஜினியின் '2.0' படம் குறித்து சிவகார்த்திகேயன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0; திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நடந்து வருகிறது

ரஜினி, விஜய் நிவாரண உதவி குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

கமல் இன்னும் களத்தூர் கண்ணாம்மா குழந்தையாகவே இருக்கின்றார்: அமைச்சர் ஜெயகுமார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய கமல்ஹாசனுக்கும் ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே

டெல்டா விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும்: பிரபல இயக்குனர் கோரிக்கை

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு சென்ற நிலையில் நிவாரண பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும்

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடி வீரன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா கடந்த சில மாதங்களாக 'தேவராட்டம்' என்ற படத்தை இயக்கி வந்தார்.