close
Choose your channels

'ஆயிரத்துள் ஒருவன் 2' எப்போது? செல்வராகவனின் பதில்

Saturday, November 24, 2018 • தமிழ் Comments
NGK
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. சோழ சாம்ராஜ்யம் குறித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் தன்னுடைய நீண்ட நாள் தாகம் என்று செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் 'புதுப்பேட்டை 2' எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்.

செல்வராகவனின் இந்த டுவீட்டுக்கு டுவிட்டர் பயனாளிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். 'புதுப்பேட்டை 2' அல்லது 'ஆயிரத்தில் ஒருவன் 2' எந்த படமாக இருந்தாலும் வரவேற்க தயாராக இருப்பதாக பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துள்ளனர். செல்வராகவன் தற்போது இயக்கி வரும் 'என்.ஜி.கே' படத்தை அடுத்து 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தை இயக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment