இயக்குனர் பாலா மீது சிங்கம்பட்டி ஜமீன் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு!

  • IndiaGlitz, [Thursday,August 19 2021]

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அவன் இவன்'. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாகவும் சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும் அவதூறாக கூறியிருந்ததாகவும் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன் வாரிசு ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவிருந்ததை அடுத்து இயக்குநர் பாலா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், சொரிமுத்து அய்யனார் கோவில் பற்றியும் அவதூறாக ’அவன் இவன்’ படத்தில் காட்சிகள் சித்தரிக்கப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் இருந்து இயக்குனர் பாலா விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது.

More News

வரலாறு காணாத கொடூர நிலநடுக்கம்? ஹைதியில் 2,000ஐ நெருங்கும் உயிரிழப்பு!

கரீபியன் அருகேயுள்ள தீவு நாடான ஹைதியில் கடந்த சனிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிற்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

எதிர்ப்புக்கு மத்தியிலும் படு கிளாமரில் பாலிவுட் நடிகை… வைரல் புகைப்படம்!

சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகை ராதிகா ஆப்தேவை, பாலிவுட் சினிமாவை விட்டே தடைசெய்ய வேண்டும்

கமல்ஹாசனை எதிர்த்து வானதி வெற்றி பெற்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்: குஷ்பு 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கமலஹாசனை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றது தனது ரொம்ப சந்தோசம் என குஷ்பு பேட்டி என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடையில் கலக்கும் காஜல் அகர்வால்: வைரல் புகைப்படங்கள்

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வால் திருமணத்திற்கு முன்னர் தனது சமூக வலைத்தளங்களில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நீச்சல் உடையில் தோன்றி

'ஆயிரத்தில் ஒருவன்' உண்மையான பட்ஜெட்: அதிர்ச்சி தகவல் அளித்த செல்வராகவன்

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் தமிழில் சுமாரான வெற்றியை பெற்றாலும்