த்ரிஷாவை பற்றி நான் அப்படி சொல்லவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த அரசியல்வாதி..!

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் த்ரிஷா குறித்து நான் அப்படி சொல்லவே இல்லை என்றும் எனது கருத்து திரித்து வெளியாகி உள்ளதாக அந்தர் பல்டி அடித்துள்ளார்.

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு, கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கூவத்தூர் சம்பவம் குறித்து கூறுகையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அவருடைய கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் குரல் கொடுத்தனர். த்ரிஷாவும் இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தான் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதை அறிந்த ஏவி ராஜு அதன் பின்னர் வெளியிட்ட வீடியோவில் தனது கருத்து திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், த்ரிஷா போல் ஒரு பெண் வேண்டும் என்று தான் முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் கூறியதாக நான் தெரிவித்தேன் என்றும் கூறியுள்ளார்.

த்ரிஷா குறித்து நான் சர்ச்சைக்குரிய வகைகள் எதையும் கூறவில்லை என்றும் அதையும் மீறி அவர் மனம் புண்பட்டிருந்தால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும் இந்த விஷயம் இதோடு முடிக்கப்படுமா அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

நடிகர் கவின் குறித்து பரவி வரும் வதந்தி.. சுந்தர் சி தரப்பு அளித்த விளக்கம்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 'கலகலப்பு 3' திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வரும் நிலையில் இது குறித்து சுந்தர் சி தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்திய விவகாரம்..ஆர்கே செல்வமணி அறிக்கை..!

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்தி பேசிய முன்னாள் அதிமுக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி இது குறித்து கண்டனம்

ஓடிடி விஷயத்தில் முக்கிய முடிவெடுத்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்: தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி..!

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடந்த நிலையில் இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்துள்ளார்,

பாடலாசிரியர் சினேகன் அளித்த புகார்.. தமிழ் நடிகை அதிரடி கைது..!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரான சினேகன் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ் நடிகை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குஷ்பு ஏன் அமைதியாக இருக்கிறார்? கூவத்தூர் விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் கேள்வி..!

அதிமுகவில் இருந்து விலகிய ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் திரையுலகை சேர்ந்த