பெண் காவலரை அசிங்கமாக பேசிய ட்ரைவர்....! கேஸ் போட்டு தூக்கிய போலீஸ்...!

  • IndiaGlitz, [Tuesday,June 08 2021]

பெண் எஸ்-ஐ கிருத்திகாவை தகாத வார்த்தைகளால் பேசிய ஆட்டோ ட்ரைவர் மீது, 5 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் நன்மை கருதி, காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை பாரிஸ் கார்னரில், காவல் அதிகாரிகள் வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்தனர். அதில் வந்த அக்சர் அலி என்ற ஆட்டோ ட்ரைவரை விசாரித்ததில், அவர் மாற்றுத்திறனாளி என்றும், மருத்துவக் காரணங்களுக்காக வெளியில் செல்வதாகவும் கூறியிருந்தார். ஆனால் போலியான இ-பதிவு முறையை வைத்து, ஆட்டோவில் நபர்களை ஏற்றி வந்தது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா, ஆட்டோ ட்ரைவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தார்.

அதற்கு அக்சர் அலி என் ஆட்டோவை எப்படி பறிமுதல் செய்யலாம்.என் ஆட்டோ சாவியை குடு.. ஒரு பொண்ணு நீயே இப்படி பேசுறியா? நீ நாசமா போய்டுவ.. என்று தகாத வார்த்தைகளால் வசை பாடியுள்ளான். இதன் பின்
இரு ஒரு நிமிஷம் என்று கூறி செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்துள்ளார். நான் 40 வருஷமா இந்த ஏரியாவில் இருக்கேன், நான் யார்னு தெரியுமா..? சேகர்பாபு கிட்ட பேசிறியா..? இல்ல அவர இங்க கூட்டிட்டு வரட்டுமா..? என்று அசிங்கமாக பேசியுள்ளார். ஆனால் கிருத்திகா நான் என் கடமையைத்தான் செய்தான் என்று கூறி விளக்கமளித்துள்ளார். ஆட்டோ ட்ரைவர் பிரச்சனையை தொடர்ந்ததால், காவல் அதிகாரி கிருத்திகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆட்டோ சாவியை அக்சர் பிடித்து இழுத்ததில் பெண் அதிகாரிக்கு கையில் காயம் ஏற்பட்டதாகவும், ஊரடங்கு தளர்வுகளை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பெண் காவலரை தவறாக பேசிய அக்பர் அலி மீது, மீது கொலை மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உட்பட 5 பிரிவுகளின் கழ்
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆட்டோ ட்ரைவர் பெண் எஸ்.ஐ-யை தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் பலரும் அக்பருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

குழந்தை பெத்துக்காமலேயே எத்தனை குழந்தைகள்: ஷகிலா நெகிழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்னர் ஷகிலா என்றால் அனைவருக்கும் அவர் ஒரு கவர்ச்சி நடிகை என்றும் அவர் நடித்த கவர்ச்சி திரைப்படங்கள் மட்டுமே ஞாபகம் வரும்.

100 பேருக்கு இல்லையென்றாலும் ஒருவருக்காவது செய்யுங்கள்: பிரபல நடிகையின் வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல லட்சக்கணக்கான குடும்பங்கள் வேலையின்றி வருமானமின்றி பசியும் பட்டினியுமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் பிரபல நடிகை

கொரோனா பாதிப்பு இறங்கியுள்ளது...! நிலவரம் கூறுவது என்ன...?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது கிட்டத்தட்ட 63 நாட்களுக்குப்பிறகு, 1 லட்சத்துக்கும் குறைந்துள்ளது.

பிறந்த நாள் அன்று தற்கொலை செய்து கொண்ட திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா மனைவி!

திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா என்பவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது

சைஸ் என்ன? என கேட்ட ரசிகருக்கு தனது பாணியில் பதில் சொன்ன பார்வதி நாயர்!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரபல மலையாள நடிகை பார்வதி நாயர். அந்த படத்தில் அவர் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்