ஏடிஎம் மிஷினை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்: பெரும் பரபரப்பு 

  • IndiaGlitz, [Monday,October 28 2019]

இதுவரை ஏடிஎம் மிஷினை உடைத்து அதிலுள்ள பணத்தை மட்டுமே திருடர்கள் கொள்ளையடித்து சென்ற நிலையில் தற்போது ஏடிஎம் மிஷினையே தூக்கி சென்றுள்ள சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள குலிபூர் என்ற பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் மிஷின் திடீரென இரவோடு இரவாக காணாமல் போய்விட்டது. அதில் சுமார் 12 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி மேனேஜர் கூறியுள்ளார்

இந்த நிலையில் காலியாக இருந்த ஏடிஎம் மிஷின் சுமார் 3 கிலோ மீட்டருக்கு அருகில் மீட்கப்பட்டதாகவும் கொள்ளையர்கள் அதில் உள்ள பணத்தை எடுத்து விட்டு வெறும் மிஷினை சாலையின் அருகே போட்டு விட்டு சென்றுள்ளது கூறப்படுகிறது.

இதுகுறித்து வங்கி மேனேஜர் அரவிந்த் குன்வார் என்பவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக வலை விரித்துள்ளனர்

More News

ஆழ்துளைக் கிணறுகள் விவகாரம்: கமல், ரஜினி கருத்து 

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சுர்ஜித் என்ற சிறுவனை மீட்க கடந்த 36 மணி நேரமாக மீட்பு படையினர் போராடி வரும் நிலையில் இந்த குழந்தை நலமுடன் மீண்டு வரவேண்டும் என லட்சக்கணக்கானோர் பிரார்த்தனை

ஈசிஆரில் இருந்து சென்னையை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்; தமிழ்நாடு வெதர்மேன்

ஈசிஆர் என்று கூறப்படும் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து சென்னைக்கு மேகக் கூட்டங்கள் நகர்ந்து வருவதால் சென்னையில் விட்டு விட்டு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன்

சுர்ஜித் மீட்பு விவகாரம்; முதல்வர், துணை முதல்வருக்கு போன் செய்த பிரதமர், லதா ரஜினி

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த 2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உள்ள நிலையில் அந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்க கடந்த இரண்டு நாட்களாக மீட்பு குழுவினர் தீவிரமாக

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழகத்திற்கு கனமழையா?

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த வாரம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது 

ஏர்லாக், போர்வெல் மிஷின்: இதை ஏன் முதலில் செய்யவில்லை?

நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் அந்த சிறுவனை ஆழ்துளையில் இருந்து மீட்க