தயாரிப்பாளராக மாறிய விஜய் இயக்குனர்

  • IndiaGlitz, [Friday,February 12 2016]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து 'ராஜா ராணி' என்ற படத்தின் மூலம் இயக்குனரான அட்லி, அந்த படத்தின் வெற்றி காரணமாக விஜய்யின் 'தெறி' படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். 'இரண்டே படங்கள் இயக்கிய அட்லி தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

இயக்குனர் அட்லி A for Apple Entertainment என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும், ஜீவா நடிக்கும் அடுத்த படத்தினை இந்த நிறுவனத்தின் மூலம் அவர் தயாரிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை அட்லியின் நிறுவனமும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த படத்தின் கதையை அட்லி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 'கவலை வேண்டாம்', 'போக்கிரி ராஜா', 'திருநாள்' ஆகிய படங்களில் நடிகர் ஜீவா நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'சார்லி' தமிழ் ரீமேக் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'சார்லி' மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியது....

விசாரணை'யில் இருந்து விலகினாரா அக்ஷயகுமார்?

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற வெற்றிமாறனின் 'விசாரணை' திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல...

'இறுதிச்சுற்று' இரண்டாம் பாகம் வருமா? இயக்குனர் சுதா பதில்

இயக்குனர் மணிரத்னம் அவர்களின் உதவியாளரான இயக்குனர் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள 'இறுதிச்சுற்று'....

ஒரே மாதத்தில் கபாலி-தெறி ஆடியோ விழா?

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் மாதம் வெளியாகும் என அவர் கூறியிருந்தார் என்பதை நேற்று பார்த்தோம்...

மணிரத்னம் அறிவுரையை மாதவன் ஏற்பாரா?

மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மாதவன் மற்றும் மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்து இயக்குனராக....