close
Choose your channels

என் மகன் சினிமாவுக்கு வந்தால் முதலில் இதைத்தான் சொல்வேன்: 'இந்தியன் 2' விழாவில் அட்லி..!

Wednesday, June 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’இந்தியன் 2’ படத்தின் புரமோஷன் விழா நேற்று மும்பையில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லி, ‘என் மகன் சினிமாவுக்கு வந்தால் முதலில் இதை செய்ய சொல்வேன் என்று கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் இணைந்த ’இந்தியன் 2’ திரைப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலானது. ’தசாவதாரம்’ போன்ற விதவிதமான கெட்டப்புகளில் கமல்ஹாசனின் இந்தியன் தாத்தா கேரக்டர் இருக்கும் நிலையில் இந்த படம் முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த ’இந்தியன் 2’ புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் அட்லி, ‘என் மகன் ஒருவேளை எதிர்காலத்தில் சினிமாவுக்கு வர நினைத்தால், முதலில் நான் அவனுக்கு கூறும் அறிவுரை என்னவென்றால் கமல்ஹாசனின் அனைத்து படங்களையும் பார்த்து சினிமா என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ’கமல்ஹாசன் அவர்கள் சினிமாவை பொருத்தவரை ஒரு பைபிள் மற்றும் என்சைக்ளோபீடியா’ என்றும் அவர் புகழாரம் சூட்டினார். அதுமட்டுமின்றி ’காலம் வரும்போது அவருக்காக ஒரு திரைக்கதையை தயார் செய்வேன் என்றும் கண்டிப்பாக அவருடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவேன்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

’இந்தியன்’ படம் உருவாகும்போது ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் அட்லி என்பதும் அப்போதே கமல் மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அட்லி இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ’ராஜா ராணி’ திரைப்படத்தின் தொடக்க விழாவில் கமல் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது பலரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.