அட்லியின் அடுத்த பட டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,April 12 2020]

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நடித்த ‘ராஜா ராணி’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் அட்லி, அதன்பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் ’பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்றுமே வசூல் ரீதியில் வெற்றிப் படங்கள் என்பதால் தற்போது அவர் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் ’ஏ பார் ஆப்பிள்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அட்லி அதன் மூலம் ’சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு தயாரித்தார். ஜீவா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவான இந்த படத்தை நடிகவேல் எம் ஆர் ராதாவின் பேரன் lke இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’அந்தகாரம்’ என்ற படத்தை இயக்குனர் அட்லி தயாரித்து வருகிறார். இந்த படத்தை விக்னேஷ் ராஜன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வரும் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியிட உள்ளதாக அட்லி தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

More News

முதல்முறையாக பெண்களின் பாராட்டுக்களை பெற்ற ஸ்ரீரெட்டி வீடியோ

நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கோலிவுட், டோலிவுட் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியதும், ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவு செய்வதும்,

ஊரடங்கு முடிந்தாலும் சுய கட்டுப்பாடு வேண்டும்: பிரபல நடிகை

கொரோனா வைரஸ் பிரச்சனை, ஊரடங்கு பிரச்சனை ஆகியவை முடிந்தபின்னர் மக்கள் இயல்பு வாழ்க்கைக்க்கு திரும்பியதுடன் என்ன நடக்கும் என்பது குறித்து பல பொருளாதார அறிஞர்கள் தங்கள் கணிப்புகளை கூறி வருகின்றனர்.

சாணி மேல தள்ளி விட்டுட்டாங்களே: ஆர்ஜே மணிமேகலை புலம்பல்

பிரபல ஆர்ஜே மணிமேகலை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாள் முதல் தனது சொந்த கிராமத்தில் இருந்து கொண்டு வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில்

இதை மட்டும் செய்தால் குற்றங்கள் குறைந்துவிடும்: மீராமிதுன் ஐடியா

கமலஹாசன் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மீராமிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் சரி, நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியே வந்த போதும் சர்ச்சைக்குறிய

ரஜினி வீட்டு முன் திடீரென போராட்டம் செய்த திருநங்கைகள்: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டின் முன் திடீரென 8 திருநங்கைகள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.