அதர்வாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,May 31 2018]

நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'செம போத ஆகாதே' திரைப்படம் வரும் ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதர்வா தற்போது நயன்தாராவுடன்  'இமைக்கா நொடிகள்' என்ற படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் 'டார்லிங்' இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

முதன்முறையாக போலீஸ் வேடத்தில் அதர்வா நடிக்கும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு '100' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சாம் சிஎஸ் இசையில் கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ஆரோ சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் அதர்வா சத்யா என்ற போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து தெரியவந்துள்ளது.

More News

பத்திரிகையாளர்களிடம் வருத்தம் தெரிவித்த ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடிக்கு சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடியிலும் சென்னையிலும் செய்தியாளர்களை சந்தித்தார்.

ரஜினி கடைசி மூச்சு வரை கன்னடராக இருக்க வேண்டும்: கர்நாடக எம்.எல்.ஏ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் பிறப்பால் கன்னடராக இருந்தாலும்,

தவறான மனிதர்களை அடையாளம் காட்டிய காலச்சூழல்: ரஜினி குறித்து பாமக ராமதாஸ்

நேற்று தூத்துகுடி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் எதற்கெடுத்தாலும் போராட வேண்டாம் என்றும், போராடும்போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும்,

ஹாலிவுட் இயக்குனருடன் அரவிந்தசாமி ஒப்பிட்ட இளம் இயக்குனர் யார் தெரியுமா?

இளம் இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் பதினாறு' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் இயக்கிய படமான 'நரகாசுரன்' படத்தின் நாயகனாக அரவிந்தசாமி நடித்தார்.

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம் திடீர் முற்றுகை: பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தூத்துகுடிக்கு சென்று அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் போராட்டம் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.