close
Choose your channels

நாங்க சந்தோஷத்துல திக்குமுக்காடிட்டோம்: அதுக்கு காரணம் எங்க மருமகள் தான்: அசோக்செல்வன் தாயார்..!

Saturday, March 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் அசோக்செல்வன் தாயார் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது ’நாங்கள் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறோம், எங்களுக்கு பிடித்த காரை எனது மகன் மற்றும் மருமகள் வாங்கி கொடுத்து எங்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட செய்து விட்டார்கள் என்றும் அதற்கு முழு காரணம் எங்கள் மருமகள் கீர்த்தி தான் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக அசோக்செல்வனின் பெற்றோர் கார் முழுதும் பழுதாகி விட்டதாகவும் இதனால் அவர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாகவும் தெரிகிறது. இதை தெரிந்து கொண்ட அசோக் செல்வன் தனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த டொயோட்டோ ஹைட்ராஸ் ஹைக்ராஸ் ஹைப்ரிட் என்ற காரை பரிசளித்தார்.

அதுமட்டுமின்றி அந்த காருக்கு BF1986 என்ற நம்பர் பிளேட்டையும் வாங்கி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் அளித்த பேட்டியில், 1986ஆம் வருடம் தான் எங்கள் திருமணம் நடந்த ஆண்டு என்பதால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம் என்றும், மேலும் BF என்றால் பெஸ்ட் ஃப்ரெண்ட் என்று அர்த்தம் என்று அசோக் செல்வன் கூறியபோது நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். இதற்கு முக்கிய காரணம் என் மருமகள் கீர்த்தி தான் என்றும் அசோக் செல்வன் தாயார் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

புது காரை வாங்கி எங்கள் வீட்டில் முன்னாள் அசோக் செல்வன் நிறுத்திய போது எங்களுக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை என்றும் அந்த காரோட விலை 30 லட்சம் ரூபாய் என்று இருந்தாலும் என் மகனின் அன்பு, இந்த உலகத்தில் விலைமதிப்பில்லாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.