சாமியார் ஆசாராம் பாலியல் வழக்கில் அதிரடி தீர்ப்பு

  • IndiaGlitz, [Wednesday,April 25 2018]

உபி மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல சாமியார் ஆசாராம் பாபு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், உபி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இவரது ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. மாநிலத்தை சேர்ந்த சிறுமியை சாமியார் ஆசாராம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சாமியார் கைது செய்யபட்டு ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நீதிபதியே ஜோத்பூர் சிறைக்கு சென்று தீர்ப்பை வழங்கினார். இந்த தீர்ப்பில் ஆசாராம் பாபு மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மேலும் 4 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து கூறிய சாமியாரின் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

முன்னதாக இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதை அடுத்து ஜோத்பூர் சிறைக்கும், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

குரங்கு செல்பி காப்புரிமை வழக்கில் பீட்டாவுக்கு கிடைத்த தோல்வி

சிம்பன்ஸி குரங்கு ஒன்று எடுத்த செல்பி புகைப்படம் உலகம் முழுவதும் வைரலான நிலையில் இந்த புகைப்படத்திற்கு காப்பீடு கோர குரங்கிற்கு உரிமை இல்லை என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

நிர்மலாதேவி விவகாரம்: தேடப்பட்டு வந்த கருப்பசாமி சரண்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு தீவிர விசாரணையில் உள்ளார்.

சிறை செல்வது எங்களுக்கு கோவிலுக்கு செல்வது போல்: மன்சூர் அலிகான்

சிறையில் இருந்து நேற்று ஜாமீனில் வெளியே வந்த நடிகர் மன்சூர் அலிகான், 'நாம் தமிழர் கட்சியினர்களுக்கு சிறை செல்வது கோவிலுக்கு செல்வது போல் ' என்று கூறியுள்ளார்

அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ரிலீஸ் தேதி மாற்றம்

அரவிந்த்சாமி நடிக்கும் "பாஸ்கர் ஒரு ராஸ்கல் " திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது இந்த படம் தமிழகமெங்கும் மே 11 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து விலகியது ஏன்? கமல் முன் தெளிவுபடுத்திய வழக்கறிஞர் ராஜசேகர்

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகினார் என்ற செய்தி இன்று காலையில் இருந்து அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தது. இந்த செய்தியை வழக்கறிஞர் ராஜசேகரும் மறுக்கவில்லை