close
Choose your channels

மஞ்சப்பை இயக்குனருக்காக காட்டுவாசியாகும் ஆர்யா

Tuesday, February 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ஆர்யாவின் 'பெங்களூர் நாட்கள்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்த 'மஞ்சப்பை' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ராகாவா இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா காட்டுவாசி இனத்தை சேர்ந்தவராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆர்யா முதன்முதலாக காட்டுவாசி கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவொரு விறுவிறுப்பான அட்வெண்ட்சர் படம் என்றும் இந்த படம் கேரளாவில் உள்ள அதிரபள்ளி மற்றும் கொடைக்கானலில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அடர்ந்த காட்டுப்பகுதியில் பயங்கரமான சண்டைக்காட்சிகளை இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் அமைக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment