மஞ்சப்பை இயக்குனருக்காக காட்டுவாசியாகும் ஆர்யா

  • IndiaGlitz, [Tuesday,February 16 2016]
சமீபத்தில் வெளியான ஆர்யாவின் 'பெங்களூர் நாட்கள்' திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடித்த 'மஞ்சப்பை' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ராகாவா இயக்கும் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வந்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா காட்டுவாசி இனத்தை சேர்ந்தவராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆர்யா முதன்முதலாக காட்டுவாசி கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவொரு விறுவிறுப்பான அட்வெண்ட்சர் படம் என்றும் இந்த படம் கேரளாவில் உள்ள அதிரபள்ளி மற்றும் கொடைக்கானலில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். அடர்ந்த காட்டுப்பகுதியில் பயங்கரமான சண்டைக்காட்சிகளை இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன் அமைக்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.