பிரபல நடிகரின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா-சாயிஷா: ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Friday,March 03 2023]

பிரபல நடிகரின் திரைப்படத்தில் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிம்பு நடிப்பில் உருவான ’பத்து தல’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் இந்த படத்தையும் டீசர் சற்று முன் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் இதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்

இந்த விழாவில் பேசிய இயக்குனர் கிருஷ்ணா ’இந்த படத்தில் ஆர்யா மற்றும் சாயிஷா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் இந்த படம் கன்னட திரைப்படத்தின் முழுமையான ரிமேக் அல்ல என்றும் அந்த திரைப்படத்திலிருந்து ஐந்து ஆறு காட்சிகள் மட்டுமே எடுத்துள்ளோம் என்றும் முழுக்க முழுக்க அதன் கதையை உள்வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு நாங்கள் மாற்றி எடுத்து உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் கலையரசன், தீஜே ஆகியோர்களுக்கு முக்கிய கேரக்டர் என்றும் அவரது கேரக்டர்கள் படம் வெளியான பிறகு பெரிதாக பேசப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பல முக்கிய விஐபிக்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற திரைப்படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார்.