ரூ.90 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் ஆர்யா.. திருப்புமுனையை ஏற்படுத்துமா?

  • IndiaGlitz, [Wednesday,January 31 2024]

ஆர்யா நடித்த ’சார்பட்டா பரம்பரை’ என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் 90 கோடி ரூபாய் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’காதர்பாஷா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதற்கு முன்னர் வெளியான ’காபி வித் காதல்’ ’வசந்த முல்லை’ ’கேப்டன்’ ’எனிமி’ ’அரண்மனை 3’ ஆகிய படங்களும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியான ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் வெற்றி மட்டுமே ஆர்யாவை இன்னும் தமிழ் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருக்கும் நிலையில் ’தங்கலான்’ படத்தின் ரிலீசுக்கு பின்னர் இயக்குனர் பா ரஞ்சித் இந்த படத்தில் முழு கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி நடிகர் ஆர்யா இப்போதே ஒரு குத்துச்சண்டை வீரருக்கான உடலை அமைப்பதற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலானோர் இந்த படத்தில் நடிப்பார்கள் என்றும் இந்த படம் ஆர்யாவுக்கு மட்டுமின்றி இயக்குனர் ரஞ்சித்துக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

More News

'தக்ஃலைப்' முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு.. அடுத்தகட்ட படப்பிடிப்பு இந்த நாட்டிலா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'தக்ஃலைப்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தற்போது

பள்ளிக்காதல் படத்திற்கு 'U' சான்றிதழ்? 'மறக்க முடியுமா' படம் குறித்து கவிஞர் தாமரை..!

பொதுவாக பள்ளி குழந்தைகள் காதல் செய்யும் திரைப்படங்கள் என்றால் 'U' சான்றிதழ் தணிக்கையில் தர மாட்டார்கள். இந்த நிலையில் விஜய் டிவி ரக்சன் நடித்த 'மறக்க முடியுமா' என்ற திரைப்படத்தின்

ஒரே ஒரு ட்விட் போட்ட சனம் ஷெட்டி.. பதறியடித்து அக்கவுண்ட்டை காலி செய்த நெட்டிசன்..!

நடிகை சனம் ஷெட்டிக்கு நெட்டிசன் ஒருவர் டீப் பேக் வீடியோ வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததையடுத்து அதிரடியாக போலீஸ் புகார் கொடுப்பதாக அறிவித்தார்.

'கோட்' படம் முடிந்ததும் பிரமாண்டமான மாநாடு.. தீவிர அரசியல் திட்டத்தில் விஜய்.!

தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' என்ற படத்தில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் தனது அரசியல் நகர்வுகளையும் கவனித்து வருகிறார்.

நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய நடிகர் இளவரசு.. என்ன காரணம்?

 நீதிமன்றத்தில் பொய் சொல்லக்கூடாது என நீதிபதி கண்டித்ததை அடுத்து நடிகர் இளவரசு நீதிமன்றத்தில் இன்று மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.