அருண்ராஜா காமராஜின் 'லேபிள்' வெப்தொடர்: சரண்ராஜ் கேரக்டரில் திடீர் திருப்பம்..

  • IndiaGlitz, [Saturday,November 25 2023]

ஹாட்ஸ்டாரில் 'லேபிள்’ என்ற வெப்தொடர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடு வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வார எபிசோடில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், சரண்ராஜின் கேரக்டரில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே நான்கு எபிசோடுகள் வெளியாகி உள்ள நிலையில் நேற்று ஐந்தாவது எபிசோடு வெளியாகி உள்ளது. இதில் பாதாளம் என்ற ரவுடியை வட சென்னையை சேர்ந்த இருவர் லேபிளுக்காக போட்டு தள்ளி உள்ளனர். எனவே பாதாளம் ஆதரவாளர்கள் இருவரையும் போட்டு தள்ள முயற்சிக்கும் நிலையில் ஜெய் அவர்களை காப்பாற்றி சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.

இதனால் பாதாளம் ரவுடியை சேர்ந்தவர்கள் ஜெய் மீது குறி வைக்கின்றனர். குறிப்பாக திருவிழாவுக்கு சென்ற ஜெய்யின் அப்பா சரண்ராஜை போட்டுத்தள்ள சில ரெளடிகள் முயற்சித்தபோது, அவர் தன்னை தாக்க வந்த ரவுடிகளை ரவுண்டு கட்டி அடிக்கிறார். அதன் பிறகு தானே ஒரு லேபிள் என்று சரண்ராஜ் கூறுவது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மனைவிக்கு ஜாக்கெட் தைத்துக் கொடுக்கும் அப்பாவி நபராக அறிமுகம் செய்யப்பட்ட சரண்ராஜ், திடீரென லேபிள் என்று கூறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் நான்கு சிறுவர்கள் ஜெய்யை கொலை செய்ய முயற்சிப்பது, அவர் தப்பிப்பதும் த்ரில் காட்சிகள் ஆக உள்ளது.

ஐந்தாவது எபிசோடு இறுதியில் ஒரு திடீர் திருப்பத்தை இயக்குனர் கொடுத்துள்ளதால் அடுத்த வாரம் எபிசோட்டை எதிர்நோக்கும் ஆவலில் பார்வையாளர்கள் உள்ளனர். மொத்தத்தில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் லேபிள் தொடர் சென்று வருவதை அடுத்து இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

More News

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' நடிகர் திருமணம்: முதல்வர் நேரில் வந்து வாழ்த்தியது ஏன்?

பிரபலங்களின் திருமணங்களுக்கு மட்டுமே செல்லும் முதல்வர் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' என்ற திரைப்படத்தில் காமெடி வேடத்தில் நடித்த நடிகரின் திருமணத்திற்கு நேரில் சென்று முதல்வர்

எத்தனை பேர் இன்று வெளியே போக போறாங்க.. முதல் புரமோவில் சொன்ன கமல்ஹாசன்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது.  இந்த நிலையில் இந்த வார இறுதியில் திடீரென மூன்று

'காந்தாரா' அடுத்த பாகம்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி..!

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்த 'காந்தாரா' படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த முக்கிய தகவலை ரிஷப் ஷெட்டி தனது

நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் பாடகர்கள்

கோலாகலமாக நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசன் நிகழ்ச்சி,  தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஃபைனலில் கலந்துகொள்ள, தேர்ந்தெடுக்கப்பட்ட

நடந்த உண்மையை சொல்ல சில நிமிடங்கள் போதும்: 'பருத்திவீரன்' விவகாரம் குறித்து அமீர் விளக்கம்..!

கார்த்தி நடித்த முதல் திரைப்படம் ஆன 'பருத்திவீரன்' திரைப்படத்தை அமீர் இயக்கி இருந்த  நிலையில் இந்த படம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.