சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண்விஜய்யின் விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,August 30 2016]

கடந்த இரண்டு நாட்களாக அருண்விஜய் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அருண்விஜய் கைது செய்யப்பட்டதாகவும், தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படும் நிலையில் தன்னை பற்றிய சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ரசிகர்களுக்கு விளக்க கடிதம் ஒன்றை அருண்விஜய் எழுதியுள்ளார்.
எனது அனைத்து ரசிகர்களுக்கும், நல விரும்பிகளுக்கும் நான் கூறிக்கொள்வது என்னவெனில், நான் எந்த காரணத்திற்காகவும் ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. இதுபோன்ற முட்டாள்தனமான காரியத்தை செய்பவன் நான் அல்ல. நான் எனது சொந்த வேலை காரணமாகவும், மன நிம்மதிக்காகவும்தான் வெளியூர் சென்றிருந்தேன். சட்டங்களை மதிக்கும் ஒரு நல்ல குடிமகனாக எனக்கு எதிரான வழக்கை சட்டப்படி சந்திப்பேன். ஆனால் இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை
என்னிடம் எந்தவிதமான விளக்கத்தையும் கேட்காமல் என்னை பற்றிய தவறான தகவல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்படி நிரூபிப்பேன். இவ்வாறு அருண்விஜய் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

More News

விஷாலின் அடுத்த படத்திற்கு சிவாஜி பட டைட்டில்?

விஷால் தற்போது நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் டப்பிங் பணியில் விறுவிறுப்பாக உள்ளார் என்றும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் ஏற்கனவே பார்த்தோம்...

'தர்மதுரை'யை பாராட்டிய பிரபல இயக்குனர்

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' சமீபத்தில் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மாபெரும் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில்...

'இருமுகன்' படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி தகவல்கள்

சீயான் விக்ரம் முதன்முதலில் இரண்டு வித்தியாசமான வேடங்களிலும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன்...

'விஜய் 60' படத்தில் விஜய்யின் கேரக்டர் என்ன தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்து வரும் 60வது படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் தனுஷ். அதிகாரபூர்வ தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்பாம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரூ.800 கோடி...