இரட்டை வேடத்தில் நடிக்கும் 'ரெட்ட தல' திரைப்படம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த அருண்விஜய்..!

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

அருண் விஜய் நடிக்கும் 36 வது திரைப்படமான ‘ரெட்ட தல’ படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது முன்னணி இடத்தை பிடித்துள்ள அருண் விஜய் நடித்து வரும் அடுத்த திரைப்படம் ‘ரெட்ட தல’. கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ’தடம்’ திரைப்படத்திற்கு பிறகு அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தின் நாயகியாக சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அருண் விஜய் தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் ஒரு சூப்பர் ஸ்டில் ஒன்றை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

எனக்கும் ராஷி கண்ணாவுக்கு போட்டி என்பது உண்மைதான்.. தமன்னா கூறிய தரமான விளக்கம்..!

சமீபத்தில் வெளியான 'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா  ஆகிய இருவரும் நடிப்பிலும் கிளாமரிலும் போட்டி போட்ட நிலையில் 'எங்கள் இருவருக்கும் போட்டி இருந்தது உண்மைதான்

மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு கிடைக்கும் 15 பேறுகள்

திருமகள், ஸ்ரீலட்சுமி, அம்புஜவல்லி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மகாலட்சுமி, செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், ஞானம், வளம், அழகு, துணிச்சல் போன்ற

பிரதமர், முதல்வர் என 2 பதவியேற்பு விழாவிற்கும் ரஜினிக்கு அழைப்பு.. சூப்பர் ஸ்டாரின் முடிவு என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரது பதவியேற்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் இரண்டு விழாவுக்கும்

12 வயதில் இப்படி ஒரு தாராளமா மனசா? முதல் வருமானம் ஒரு கோடி ரூபாயை என்ன செய்தார் தெரியுமா?

மகேஷ் பாபுவின் மகளுக்கு தற்போது 12 வயது மட்டுமே ஆகும் நிலையில் அவருக்கு முதல் வருமானமாக ஒரு கோடி ரூபாய் கிடைத்துள்ள நிலையில் அந்த பணத்தை அவர் தனது தேவைக்காக வைத்துக் கொள்ளாமல்

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் திருமண வதந்தி.. ஒரே ஒரு புகைப்படத்தில் முற்றுப்புள்ளி வைத்த சுனைனா..!

நடிகை சுனைனா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படத்தை வைத்து அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்கள்