அடுத்த கட்டத்திற்கு சென்ற 'செக்க சிவந்த வானம்'

  • IndiaGlitz, [Saturday,June 16 2018]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'செக்க சிவந்த வானம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக அருண்விஜய் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அருண்விஜய்யை அடுத்து சிம்பு, விஜய்சேத்பதி, அரவிந்தசாமி உள்பட இந்த படத்தில் நடித்த அனைவரும் டப்பிங் செய்யவுள்ளனர்.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் செப்டம்பர் மாதத்தில் இந்த படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜெஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

More News

தனுஷின் 'மாரி 2' படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை

தனுஷ் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி சரத்குமார்

தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகத்திற்கு நன்றி கூறிய கமல்

நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த வாரம் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

3500 ஒளியாண்டு தொலைவிற்கு செல்லும் ஸ்டீபன் ஹாக்கிங் குரல்

இங்கிலாந்து நாட்டின் பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் காலமானர் என்பது தெரிந்ததே.

பேரறிவாளனை கருணைக்கொலை செய்துவிடுங்கள்: அற்புதம்மாள் உருக்கம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இரண்டாவது திருமணமா? 'கலக்க போவது யாரு' நவீன் விளக்கம்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கலக்க போவது யார்' நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நவீன் தனது முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாகவும்