படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம்… இன்ஸ்டாவில் அவரே கொடுத்த விளக்கம்!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

பிரபல இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் புதுப்படம் ஒன்றில் நடிகர் அருண்விஜய் நடித்துவருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பின்போது கையில் காயம் ஏற்பட்டதாகவும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் நடிகர் அருண் விஜய் தன்னுடைய இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் புதுப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதற்கான சண்டைக் காட்சியில் கலந்துகொண்ட நடிகர் அருண் விஜய்க்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு முடிந்தவுடன் சிகிச்சை எடுத்துக் கொண்டதாக நடிகர் அருண் விஜய் தன்னுடைய இன்ஸ்டாவில் தெரிவித்து உள்ளார்.

தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்“ திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாக நடித்து இருந்தார். இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் அதற்குப் பின்பு “குற்றம் 23”, “தடம்”, “மாஃபியா“ போன்ற படங்கள் இவரது நடிப்பில் வெளியாகியது. மேலும் தனது மகனுடன் சேர்ந்து இவர் நடித்த “ஓ மை டாக்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் “சினம்”, “அக்னி சிறகுகள்” போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு தற்போது இயக்குநர் ஹரியுடன் இணைந்து புதுப்படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அந்தப் படத்தின் சண்டைக் காட்சியில் தனது வலது கையில் காயம் ஏற்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

More News

மாலத்தீவு சென்ற நடிகை ஹன்சிகா … மீண்டும் பிகினி புகைப்படம் வைரல்!

தமிழ் சினிமாவில் பப்ளி நடிகையாக வலம்வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி தற்போது படு ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

'சார்பாட்டா பரம்பரை': இயக்குனர் ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும்

5 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்க வந்த இசையமைப்பாளர்: ஹரி படத்தில் சிறப்பு தோற்றம்!

இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல்வேறு அவதாரங்கள் எடுத்த ஒருவர் ஐந்து வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் ஹரி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார்.

முதல் பாகம் ரிலீசுக்கு முன்பே 2வது பாகத்தின் படப்பிடிப்பு: 'புஷ்பா' உரிமைக்கு போட்டி!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக

தாலிபான்கள் வசம் சென்றுவிட்ட ஆப்கானிஸ்தான்… இனியென்ன நடக்கும்?

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் கடந்த 10 தினங்களாக நாடு முழுவதும் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.