அருண்விஜய்யின் 'தடம்' சென்சார் தகவல்கள்

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான அருண்விஜய், பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் அவருக்கு திருப்பத்தை தந்த படம் அஜித்தின் 'என்னை அறிந்தால்' என்ற படம் தான். விக்டர் என்ற கேரக்டரில் அஜித்துக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்த அருண்விஜய், அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பல நல்ல வாய்ப்புகளை பெற்றார்

அந்த வகையில் அருண்விஜய் தற்போது நடித்துள்ள படம் 'தடம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சென்று திரும்பியுள்ளது. சென்சாரில் இந்த படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

தடையற தாக்க' படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருண்விஜய், தன்யா, வித்யா பிரதீப், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அருண்ராஜ் இசையில் கோபிநாத் ஒளிப்பதிவில் சக்தி படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை இந்தர்குமார் தயாரித்துள்ளார்.
 

More News

வருமான வரித்துறை அலுவலகராக மாறிய 'குப்பைத்தொட்டி' இளம்பெண்

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அசாம் மாநிலத்தில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் ஒருவர் குப்பைத்தொட்டியில் ஒரு அழகான பெண் குழந்தை அழுது கொண்டிருந்ததை கண்டார்.

திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பத்து தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று வரை தலைவர்கள் கூறிவந்தனர்.

என் படத்தால் கவுதமி பெர்சனலாக பாதிக்கப்பட்டாரா? இயக்குனரின் கேள்வியால் பரபரப்பு

இயக்குனர் வாராகி இயக்கிய 'சிவா மனசில புஷ்பா' என்ற படத்தின் டைட்டில் மாற்றப்பட வேண்டும் என்ரு சென்சார் போர்டு கூறியதை அடுத்து, இயக்குனர் வாராகி ரிவைசிங் கமிட்டிக்கு சென்றார்

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இசையமைப்பாளர் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கவுள்ள படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம்.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் உருவான 'சீமராஜா' படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க முடிவு செய்துள்ளார்.