தமிழ்ப்புத்தாண்டில் தடம் பதிக்கும் 'தடம்'

  • IndiaGlitz, [Friday,March 02 2018]

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் கோலிவுட்டில் பிசியாகிவிட்ட நடிகர் அருண்விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'தடம்'. அருண்விஜய் நடித்த குற்றம் 23 திரைப்படத்தை தயாரித்த ரெதான் - தி சினிமா பீப்பள் நிறுவனத்தின் இந்தர் குமார் தயாரித்துள்ள அடுத்த படமான தடம் திரைப்படம் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணியில் உருவான தடையறத்தாக்க பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்களின் கூட்டணியில் உருவாகும் தடம் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தற்போது தடம் படத்தின் டப்பிங் இன்று துவங்கியது.

அருண்ராஜ் இசையில் கோபிநாத் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் மதன்கார்க்கில் பாடல்வரிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக் கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படம் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

More News

சுந்தர் பிச்சையின் ஸ்ரீதேவி குறித்த டுவீட்டால் ஆவேசமாகிய தமிழர்கள்

சற்றுமுன்னர் கூகுள் சி.இ.ஓ சுந்தர்பிச்சை தனது சமூக வலைத்தளத்தில் ஸ்ரீதேவி மரணம் குறித்து குறிப்பிடுகையில்,''ஸ்ரீதேவி நடித்த படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது

விஜய்யின் முதல் பட நடிகை தான் 'காலா' நாயகி: ஈஸ்வரிராவ் குறித்து ஒரு பார்வை

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை இணையதளங்களில் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது. இந்த டீசரில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பஞ்ச் வசனங்களும் சமூக வலைத்தளங்களின் டிரெண்டாக உள்ளது.

கடைசி வரை நிறைவேறாமல் போன ஸ்ரீதேவியின் கடைசி ஆசை

நடிகை ஸ்ரீதேவி கடந்த வாரம் துபாயில் எதிர்பாராத விதத்தில் மரணம் அடைந்தது அவருடைய குடும்பத்தினர்களை நிலைகுலைய வைத்துள்ளது.

ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்கலே! இதுக்கு என்ன அர்த்தம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தின் டீசர் இன்று அதிகாலை வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

சரண் அடைய சொல்லிவிட்டு சதி செய்துவிட்டார்கள்: மதுரை என்கவுண்டர் குறித்து உறவினர்கள் குற்றச்சாட்டு

மதுரையில் நேற்று இருளாண்டி மற்றும் சகுனிகார்த்திக் ஆகிய இரண்டு ரவுடிகள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட நிலையில் இது திட்டமிட்ட என்கவுண்டர் என்றும்,