ஜல்லிக்கட்டுக்காக திமுகவை எதிர்க்க திட்டமா? அருள்நிதியின் அதிரடி பதில்

  • IndiaGlitz, [Thursday,January 19 2017]

ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெற்றே தீரவேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்கள் தமிழகம் முழுவதும். போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்திற்கு அனைத்து தரப்பினர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரையுலகினர்களின் ஆதரவு பெருமளவு இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், பிரபல நடிகருமான அருள்நிதி சாலையில் உட்கார்ந்து போராடி வருகிறார். தான் அரசியல் செய்வதற்காக இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், ஒரு நடிகனாக, பொதுமக்களில் ஒருவனாக, குறிப்பாக ஒரு தமிழனாக இங்கே உட்கார்ந்து போராடி வருவதாகவும், ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடக்க வேண்டும் என்பதை தவிர தனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை' என்றும் கூறினார்.

மேலும் ஜல்லிக்கட்டு தடைக்கு திமுகவும் ஒரு காரணம் என்பதால், போராடி வரும் இளைஞர்களை போல நீங்களும் திமுகவை எதிர்ப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அருள்நிதி, 'ஜல்லிக்கட்டுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்களை எதிர்ப்பேன், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யார் இருந்தாலும் அவர்களை ஆதரிப்பேன்' என்று அதிரடியாக கூறியுள்ளார்,.

More News

எங்களை நேரடியாக சந்தியுங்கள். பிரதமர் மோடிக்கு ஆர்ஜே பாலாஜி வேண்டுகோள்

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அவசர சட்டம் இல்லை. கைவிரித்தார் மோடி

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அவசர சட்டம் வராவிட்டால் முதல்வரை முற்றுகையிடுவோம். பிரபல இயக்குனர்

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதால் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்

ஜல்லிக்கட்டு பிரச்சனை: முதல்வரிடம் மோடி கூறியது என்ன?

தமிழகத்தில் இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த நேற்றிரவு தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்

வெளிநாட்டு பானங்களை விற்க மாட்டோம். விழிப்புணர்வு பெற்ற வணிகர்கள்

வெளிநாட்டு பாங்களில் பூச்சி மருந்து கலந்துள்ளதால் அதை உபயோகிக்க வேண்டாம் என்று ஏற்கனவே பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என வணிகர்கள் அறிவித்து வருகிறனர். முதல்கட்டமாக தேனி ம