அருள்நிதியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
இளையதலைமுறை நடிகர்களில் நல்ல கதையை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர்களில் ஒருவர் அருள்நிதி. அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று அவரது வெற்றி பட பட்டியலில் இணைந்தது.
இந்த நிலையில் எஸ்பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் அருள்நிதி நடித்து வருகிறார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் டைட்டில் தற்போது 'K-13' என்று அறிவிக்கப்பட்டு டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
அருள்நிதி ஜோடியாக 'விக்ரம் வேதா' புகழ் ஷாரதா ஸ்ரீநாத் நடிக்கும் இந்த படத்தை பரத் நீலகண்டன் இயக்கி வருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments