ஆருத்ரா கோல்டு மோசடி.. தமிழ் ஹீரோ மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தமிழ் ஹீரோ ஒருவர் 15 கோடி ரூபாய் பணம் பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும், இதில் சில பாஜக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ஆருத்ரா மோசடியில் தமிழ் ஹீரோ மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் பணம் பெற்று இருப்பதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் ஆர்கே சுரேஷ் இடையே ரூபாய் 15 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ரூசோ என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த 500 முகவர்கள் மூலம் 800 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பது விசாரணையின் மூலம் அம்பலம் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் ஆர்கே சுரேஷ் ஐந்து மாதத்திற்கு மேலாக வெளிநாட்டில் இருந்து வருவதாகவும் அவர் இதுவரை சென்னை திரும்ப வில்லை என்றும் கூறப்படுகிறது.

More News

சூர்யா சொன்னது அப்ப புரியல, இப்ப தான் புரியுது: உதயநிதி ஸ்டாலின்..!

சூர்யா சொன்னது அப்போது புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடந்த சினிமா விழா ஒன்றில் பேசியுள்ளார்

ஊட்டிக்கு பைக் டிராவல் சென்ற இளம் நடிகர்… கோர விபத்தில் சிக்கி வலது காலை இழந்த சோகம்!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக இருந்து மறைந்த நடிகர் ராஜ்குமாரின் நெருங்கிய உறவினரும் தற்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து வருபவருமான இளம் நடிகர் சூரஜ்குமார்

உண்மையான டைட்டானிக் பேரழிவு மாதிரியே இருக்கு… சோகத்தை பதிவிட்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன்!

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் உதிரிபாகங்களை பார்வையிடுவதற்காக சிறிய ரக நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்து காணாமல்போன 5 பேர் குறித்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்

உங்களுக்கு பிக்பாஸ்ல்ல நல்ல  எதிர்காலம்  இருக்கு: கஸ்தூரி ட்விட்டிற்கு கமல் கட்சி நடிகை பதிலடி..!

உங்களுக்கு பிக்பாஸ்ல நல்ல எதிர்காலம் இருக்கு என்று கமல் கட்சியில் சமீபத்தில் சேர்ந்த நடிகை வினோதினி குறித்து குறித்து நடிகை கஸ்தூரி ட்விட் போட்ட நிலையில் வினோதினி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மகளுடன் க்யூட் புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா.. ஆனாலும் குவியும் கண்டனங்கள்..!

நடிகை ஸ்ரேயா தனது மகளுடன் இருக்கும் கியூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்கள் சொன்னாலும் சில ரசிகர்கள் அவரது