லஞ்சம் கொடுப்பதற்காக தட்டு ஏந்தி பிச்சை எடுத்த பொதுமக்கள்… களைக்கட்டும் போராட்டம்!!!

  • IndiaGlitz, [Friday,November 06 2020]

 

கள்ளக்குறிச்சி அருகே கிராம நிர்வாக அலுவலர் ஒருவருக்கு லஞ்சம் கொடுப்பதற்காக தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பொதுமக்கள் உட்பட லஞ்ச ஒழிப்பு நுகர்வோர் பேரவையினர் என்ற ஒரு அமைப்பும் கலந்து கொண்டு இருக்கிறது. அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் அடுத்த எடுத்தவாய்நத்தம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் நபர் தொடர்ந்து லஞ்சம் வாங்கி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை போன்ற அரசின் இலவசத் திட்டங்களுக்கும் அவர் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ளவர்களுக்கு இலவச வீட்டுமனை வாங்கிக் கொடுப்பதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாகவும் ஆனால் இதுவரை யாருக்கும் இலவச வீட்டுமனைப் பட்டாவை பெற்றுத் தரவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திடீரென்று போராட்டத்தில் குதித்தனர். அந்தப் போராட்டத்தில் பொதுமக்களிடம் லஞ்சமாக வாங்கியப் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும். தொடர்ந்து லஞ்ச குற்றங்களில் ஈடுபட்டு வரும் அந்த நபரை பணியில் இருந்து நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடைபெற்றதாகக் கூறி போலீசார் லஞ்ச ஒழிப்பு நுகர்வோர் பேரவையைச் சார்ந்த 39 பேரை கைது செய்து பிறகு மாலையில் விடுவித்தனர். லஞ்சம் வாங்கும் கிராம நிர்வாக அலுவலரை தண்டிக்கும் வகையில் பொதுமக்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

More News

குடுமிபிடி சண்டைக்கு நடுவே ஒரு நாய்க்கு வழங்கப்பட்ட மேயர் பதவி!!! திடுக்கிடும் தகவல்!!!

உலக அளவில் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் கடும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் இந்த வார இறுதியில்

அடுத்த வாரம் கேப்டன் ஆரி? கதி கலங்கும் சம்யுக்தா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டவர்களாக ஆரி, சோம் மற்றும் நிஷா ஆகிய மூவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருக்கும் வைக்கப்படும் டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்

தனுஷை அடுத்து பாலிவுட் நடிகருக்கு ஜோடியான 'மாஸ்டர்' மாளவிகா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்து இருந்தாலும் மாளவிகா மோகனனுக்கு மிகப்பெரிய பெயர் வாங்கித் தந்தது தளபதி விஜய்யின்

'மாஸ்டர்' டீசர், டிரைலர் எப்போது? லோகேஷ் கனகராஜ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீஸ்க்கு கடந்த ஏப்ரல் மாதமே தயாராக உள்ளது என்பதும் ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்த படம் ரிலீசாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

சூர்யா ரசிகர்களுக்கு விருந்தாக வரும் 'நாலு நிமிஷம்'

சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே