நடிகை யாஷிகா ஆனந்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Thursday,March 23 2023]

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகா ஆனந்தை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரை உலகின் இளம் நடிகைகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது நண்பர்களுடன் மாமல்லபுரம் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிசெட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். இந்த நிலையில் யாஷிகா போலீசாரிடம் வாக்குமூலம் தந்த போது ’காரை ஓட்டியது நான் தான் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அதி வேகமாக காரை ஓட்டியதால் கார் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், யாஷிகாவின் தோழி பவானி சீட் பெல்ட் அணியாததால் காரில் இருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் நேற்று அவர் ஆஜராகவில்லை. இதனை அடுத்து 25ஆம் தேதிக்குள்ள அவர் ஆஜராக வேண்டும் என கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

More News

ஐபிஎல் தொடக்க விழாவில் 2 முன்னணி தமிழ் நடிகைகள்?

 இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் திருவிழா தொடங்க இருக்கும் நிலையில் வரும் 31ஆம் தேதி தொடக்க விழாவுடன் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

'லியோ' படத்தின் 7 நிமிட வீடியோவை வெளியிட்ட படக்குழு.. இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்றது என்பதை பார்த்தோம். சமீபத்தில் விஜய், காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்ட

'பசங்க' குழந்தை நட்சத்திரத்தை திருமணம் செய்து கொண்ட விஜய் டிவி சீரியல் நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

இயக்குனர் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான 'பசங்க' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகரை விஜய் டிவி சீரியல் நடிகை ஒருவர் திருமணம் செய்து கொண்டார்.

முதல் பாகத்திற்கு ரஜினி-கமல்.. 2ஆம் பாகத்திற்கு இவரா? 'PS 2' படக்குழுவினர்களின் மாஸ் பிளான்..!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம்

'விடுதலை' படத்தின் அதிர்ச்சியான சென்சார் தகவல்.. ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

 இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.